(30)

(30)

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து

தந்தக் களிறுபோல் தானே விளையாடும்

நந்தன் மதலைக்கு நன்று மழகிய

உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.

பதவுரை

வந்த

(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை

சிறுபிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து

தன்வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறுபோல்

கொம்பு முளைத்த யானைக்குட்டிபோல்
தானே

தானே முக்கியனாய் நின்று
விளையாடும்

விளையாடுமவனாய்
நந்தன்

நந்தகோபர்க்கு
மதலைக்கு

(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய

மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ

நாபி இருக்கிறபடியை

காணீர்!

ஒளி

ஒளியால்விஞ்சின
இழையீர்

ஆபரணங்களணிந்த பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரான் தான் சிறு குழந்தையாயிருந்தாலும் தன்னோடு விளையாடுவதற்குக் கூட்டமாய் வரும் பாலகர்களையெல்லாம் தனது வல்லமையால் அடக்கி, அவர்களெல்லாம் ஒருபக்கமும், தான் மாத்திரம் ஒருபக்கமுமாக நின்று இப்படிதானே பிராதானனாய் நின்று விளையாடுவன்; அப்போதுதான் கொம்பு முளைக்கப்பெற்ற யானைக்குட்டியை த்ருஷ்டாந்தமாகச் சொல்லத்தகுந்திருப்பன்; இப்படிப்பட்டவனுடைய உந்தியைப் பாருங்களென்கிறாள்.

English Translation

Bright-jeweled Ladies, come here and see the perfectly beautiful navel of his child born to Nandagopa; like an elephant he plays with himself, ignoring the teams of children who have come to play.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top