(99)

(99)

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து

நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த

அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.

பதவுரை

பஞ்சவர்

பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்

(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப்போய்

(அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்)

பாரதம்

பாரதயுத்தத்தை
கைசெய்து

அணிவகுத்துச்செய்து
நஞ்சு

விஷத்தை
உமிழ்

கக்குகின்ற
நாகம்

(கானிய) ஸர்ப்பம்
கிடந்த

இருந்த
நல்பொய்கை

கொடிய மடுவிலே
புக்கு

புகுந்து
அஞ்சு

(ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்

(அப்பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு

குதித்து

(நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)

அருள்செய்த

(அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட

அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;

ஆயர்

இடையர்களுக்கு
பெருமானே

தலைவனானவனே!

அச்சோ அச்சோ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – காளியனை அடக்கியது முன்னும் பாரதம்கை செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல் இங்ஙனமருளிச் செய்தாரென்க.  ‘கைசெய்து’ என்றவிடத்து கை – தமிழ் உபஸர்க்கமென்பர்.  நல்பொய்கை – எதிர்மறையிலக்கணை (விபரீதலக்ஷணை) அஞ்ச – காளியன் அஞ்சும்படி எனினுமொக்கும்.

English Translation

O Dark-hued cowherd-Lord, you went as a messenger for the five Pandavas, then waged the great Bharata war.  You entered the lake haunted by the venom-spitting serpent Kaliya and leapt on his hoods, struck terror, then graced him, come Acho, Acho!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top