(98)

(98)

செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்

பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப

சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய

அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.

பதவுரை

செங்கமலம்

செந்தாமரைப்பூவில்
தேன்உண்ணும்

தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டேபோல்

வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து

(உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்

பவளம்போற் செந்நிறமான உனதுவாயில்
மொய்ப்ப

மொய்த்துக்கொள்ளும்படி
வந்து

ஓடிவந்து
சங்கு

ஸ்ரீபாஞ்சஜக்யத்தையும்
வில்

ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்

நந்தலத்தையும்
தண்டு

கௌமோதகியையும்
சக்கரம்

ஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய

(பூவேந்தினாற்போல) தரித்துக்கொண்டுள்ள
அம் கைகளாலே

அழகிய கைகளாலே

அச்சோ அச்சோ

வந்து

ஓடிவந்து
ஆர தழுவா

திருப்தி உண்டாகும்படி நன்றாகத்தழுவி

அச்சோ அச்சோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஓடி விளையாடும்போது வாரின கூந்தலும் கலைந்துவிடுமாதலால் அங்ஙனங்கலைந்து தொங்கும் கறுத்த மயிர்கள் செந்நிறமான வாயிற்படிதல் – செந்தாமரைப்பூவில் கருவண்டுகள் மொய்த்துக்கிடத்தலை ஒத்திருக்கு மென்க.  பங்கி – ஆண்மயிர் “பங்கியே பிறமயிர்க்கும் பகருமாண் மயிர்க்கும் பேராம்” என்ற நிகண்டு காண்க.  தழுவா = கீழ்பாட்டில் ‘வாரா’ என்றது போலக் கொள்க.  இப்பாட்டில் இரண்டாமடியில் தளைதட்டாநின்றது;  இவ்வாறே பாடங்காண்கிறது.

English Translation

Your dark curly locks hover around your coral-lips  like bumble bees drinking nectar from a lotus; with tender hands that gracefully hold the conch, discus, mace, bow and dagger, come running to embrace me, Acho, Acho!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top