(963)

(963)

பணங்களாயிரமுடையநல்லவரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,

இணங்கிவானவர்மணிமுடிபணிதர இருந்தநல்லிமயத்து,

மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,

பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும் பிரிதிசென்றடைநெஞ்சே!

 

பதவுரை

வானவர்

தேவர்கள்

இணங்கி

திரளாகக் கூடி

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று

‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி,

மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து

மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண்,

மணம் கொள் நெடு மாதவி கொடி அவை

பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை

விசம்பு உற நிமிர்ந்து

ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து

முகில் பற்றி பிணங்கு

மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே

பூ

புஷ்பிக்கப்பெற்ற

பொழில்

(குருக்கத்திச்)சோலைகளிலே

வண்டு நுழைந்து

வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து

இசை சொலும்

இசைபாடுமிடமான

பிரிதி

திருப்பிரிதியை

நெஞ்சே! சென்று அடை-;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை


பணங்க ளாயிரமுடைய நல்லரவணைப்பள்ளிகொள் பரமா! என்று *

இணங்கி வானவர் மணிமுடி பணி தர இருந்த நலிமயத்து *

மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில்பற்றி *

பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டிசைசொலும் , பிரிதி சென்றடை நெஞ்சே!



***-(பணங்களாயிரம்.) தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்.

வானவர்கள் திரள் திரளாக இமயமலையின்கண் வந்து எம்பெருமானை நோக்கி ‘ ஸ்வாமிந்! தேவரீர் திருப்பாற்கடலிலே சேஷசயனத்திலே பள்ளி கொண்டிருந்த பெருமானன்றோ ‘ என்று சொல்லி அவன் திருவடிகளிலே தலையை வீழ்த்தி வணங்குவர்களாம். இணங்கி– பொருந்தி என்றுமாம்.

பின்னடிகளின் கருத்து: நறுமணமுள்ள குருக்கத்திக்கொடிகளானவை ஆகாசம் வெளியடையும்படி ஒங்கிப்படர்ந்து மேகமண்டலத்தோடு போராடும் போது அந்த ஸம்மர்த்தத்தாலே பூக்கள் அலரும் ; அப்பூக்களிலே மதுபானம் பண்ண நினைத்து வண்டுகளானவை அம்மேகத்துக்கும் கொடிக்கும் நடுவே நுழைந்து மதுவைப் பருகிக் களைத்துச் செருக்குக்குப் போக்குவீடாக இசைபாடாநிற்கும்; திருப்பிரிதியடங்கலும் இந்த ஆரவாரமேயாயிருக்கும்.  அப்படிப்பட்ட தலத்தைச் சென்று சேர் நெஞ்சே!.

மாதவிக்கொடியானது முகிலோடு பிணங்குவதாகவும் வண்டுகள் இசை பாடுவதாகவுஞ் சொல்லுகிறவிதற்கு ஒரு உள்ளுறை பொருள் கூறலாம்;- மாதவிக்கொடியென்று பிராட்டியைச் சொல்லுகிறது; முகில் என்று எம்பெருமானைச் சொல்லுகிறது ; அபராதிகளான சேதநர்களை க்ஷமித்து ரக்ஷிப்பதற்காகப் பிராட்டி எம்பெருமானோடே போராடி மன்றாடுவளிறே; அதைச் சொல்லுகிறது. ஸாரக்ராஹிகளான மஹான்கள் வந்து புகுந்து தோத்திரம் பண்ணும்படியைச் சொல்லுகிறது வண்டிசைசொலும் என்று. பணம், பரமன், மாதவி-வடசொற்கள். … … (சு)


English Translation

“Thousand-hooded snake- recliner of Milky-Ocean, Lord in the Vyuha state!”, — Gods in hordes’do come and offer worship with their heads to Resident of Himavan peaks! Fragrant Madavi climbing high to touch the sky and playing with the cushion-clouds, O! Bees in gardens hover drinking nectar, come to sing in Piriti, — O, Go to, my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top