(955)
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம்.
பதவுரை
|
கலைகள் |
– |
சாஸ்த்ரங்களை |
|
கற்றிலேன் |
– |
கற்றறிந்தவனல்லேன்; |
|
ஐம்புலன் கருதும் கருத்துள் |
– |
பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே |
|
மனதைத் திருத்தினேன் |
– |
நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்; |
|
அதனால் |
– |
இப்படியிருந்ததனாலே |
|
பேதையேன் |
– |
அவிவேகியான நான் |
|
நன்மை பெற்றிலேன் |
– |
ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்; |
|
பெரு நிலத்து ஆர் |
– |
பெரிய இப்பூமியிலேயுள்ள |
|
உயிர்க்கு எல்லாம் |
– |
பிராணிகளுக்கு எல்லாம் |
|
செற்றமே வேண்டி |
– |
தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக்கொண்டு |
|
திரிதருவேன் |
– |
(அதுவே போதுபோக்காகத்)திரிந்து கொண்டிருந்தேன், |
|
(இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும், இன்று பகவத் கடாக்ஷத்தாலே)- |
||
|
தவிர்ந்தேன் |
– |
இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்; |
|
அடியேன் |
– |
தாஸனாகப் பெற்ற நான் |
|
செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி |
– |
செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து |
|
நாராயணா என்னும் நாமம் |
– |
நாராயணா நாமத்தை |
|
நல் துணை ஆக பற்றினேன் |
– |
நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
** * – (கற்றிலேன் கலைகள் ] ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குனிந்து கேட்டவனல்லேனாகையாலே ஒரு சாஸ்த்ர ஞானமும் எனக்கில்லை ; நெஞ்சை ஒரு நொடிப்பொழுதாகிலும் நல்விஷயத்திலே செலுத்தின னல்லேன் ; செவி வாய் கண் மூக்கு உடலென்னுமைம்புலன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலேயே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவு கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை ஸம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் ஹிம்ஸிக்கும் வழியைச் சிந்தித்தும் திரிந்தேன்; எல்லாரையும் ஹிம்ஸித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்றுவரையில் ; இன்று இந்த நிலைமைகளெல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியைச் சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்………………………………………………………………………………………………………………………………………………..……. (௮)
English Translation
I had no schooling, I let my senses rule and to lead my heart everywhere. I lost a good life, O File-to-me wretch; I roamed like death on all creatures. I put an end to my roaming everywhere seeking a life of redemption. I found the perfect Mantra for comfort, Narayana is the good name!
