(943)

(943)

கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்

பண்டை வல்வினை பாற்றி யருளினான்

எண்டி சையு மறிய இயம்புகேன்

ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே.

பதவுரை

பிரான்

பரமோபகாரகராய்
காரி மாறன்

பொற்காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார்
என்னை

(தமது பெருமையை அறியாத) என்னை
கண்டு

கடாக்ஷித்து
கொண்டு

கைக்கொண்டு
பாண்டை வல் வினை

அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாவங்களை
பாற்றி அருளினான்

உருமாய்ந்து போம்படி பறக்கடித்தருளினார்; (ஆதலால்)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே

அழகிய தமிழ்க்கவிகளுக்கு ஆகரமான அவ்வாழ்வாருடைய க்ருபையையே
எண் திசையும்

எட்டுத் திக்கில் உள்ளவர்களும்
அறிய

அறியும்படி
இயம்புகேன்

சொல்லக்கடவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்: ஆழ்வார் திருவாய்மொழி பாடவல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்தவல்லவர் இத்யாதியாகவுள்ள அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்; பாவங்கள் கூடுபூரித்துக்கிடந்த அடியேனைப் பரமபரிசுத்தனாக்கி ஆட்கொண்ட பெருமையாதொன்றுண்டு. இதற்குமேல் வேறொருபெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை; அந்தப் பெருமையையே நாடெங்குமறியப் பறையடிக்கின்றேன் என்கிறார்.

கண்டுகொண்டு என்றவிடத்தில் கொண்டு என்பது துணைவினையன்று; கண்டு என்றும் கொண்டு என்றும் இரண்டும் தனித்தனி வினையெச்சங்கள். என்னைக் கடாக்ஷித்து, என்னுடைய துர்க்கதியே பற்றாசாக என்னை அங்கீகரித்தருளி என்றபடி. “இருந்தான் கண்டுகொண்டு எனதேழை நெஞ்சாளும்” என்று ஆழ்வார் பகவத் விஷயத்திலே அநுஸக்தித்தவாற்றை இவர் ஆழ்வார் விஷயத்திலே அநுஸந்திக்கிறார்.

காரி மாறன் – ஆழ்வாருடைய திருத்தகப்பனார்க்குப் பொற்காரியார் என்று திருநாமம். ஆழ்வார் உலகநடைக்கு மாறாயிருந்ததால் மாறன் எனத்திருநாமம் பெற்றார். மாறன் பிரான், மாறப்பிரான்; “சில விகாரமா முயர்திணை” (நன்னூல்).

பண்டை வல்வினையாவது-பகவச்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதஸேஷத்வமென்று அறியப்பெறாமை.  பாகவத விஷயத்தை விலக்கிப் பகவானளவிலே பண்ணும் பக்தியைப் பாபமென்றிறே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வது. “***“ = பரதேந ததாநக:” என்றவிடத்து அநக: என்பதற்கு வியாக்கியானம் ஸேவிக்க.

பாற்றி – பாறச்செய்து; பாறுதல் உருமாய்ந்தொழிதல்: பாறு என்ற வினைப்பகுதியடியாப் பிறந்து பிறவினையில் வந்த வினையெச்சம்.

அறியவியம்புகேன் =   “அறியச் சொன்னவாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப்போலே நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார். “தமிழ்ச் சடகோபன்” என்றது தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

English Translation

My Kari-Maran took a note of Karmas of my older days. I shall let the Quarters know, Satakopan-the-Tamil’s grace.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top