(941)

(941)

நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்

நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்

செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்

கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே.

பதவுரை

அடியேன்

(இன்று ‘அடியேன்’ என்று சொல்லும்படி திருந்தின) நான்
முன் எலாம்

(ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம்
பிறர்

அயலாருடைய
நல்பொருள் தன்னையும்

நல்ல பொருள்களை
நம்பினேன்

ஆசைப்பட்டுக் கிடந்தேன்;
(பிறர்) மடவாரையும்

பிறருடைய ஸ்த்ரீகளையும்
நம்பினேன்

விரும்பிப்போந்தேன்;
இன்று

இப்போதோவென்றால்
செம் பொன் மாடம்

செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களையுடைய
திரு குருகூர் நம்பிக்கு

திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு
அன்பன் ஆய்

பக்தனாகப்பெற்று
சதிர்த்தேன்

சதிரையுடையேனானேன் (சமத்தனாய்விட்டேன்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸத்துக்கள் உம்மைக் கைவிடும்படி உம்பக்கல் என்ன புன்மையிருந்ததென்ன; அநாதிகாலமாகப் பரத்ரவ்யாபஹாரமும் பரதாரபரிக்ரஹமும் பண்ணிப்போந்தேன் என்று முன்னிரண்டடிகளாற் கூறியபின்னர், ‘இப்போது எப்படியிருக்கிறீர்?’ என்று கேட்க, இப்போது ஆழ்வாருடைய அருளுக்கு இலக்காகப்பெற்றுச் சதிரனாய்விட்டேன் என்கிறார் பின்னிரண்டிகளால்.

முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவுசெய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும் நன்பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக்கடவது.  ஈச்வரனுக்கு மேஷபூதமான விலக்ஷண ஆத்மவஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை.   “***“-யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.

“***“-உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற ப்ரமாணச்சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது.  இப்படி ஆத்மாபஹாரம் பண்ணினே னாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படுகுழியிலே விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்; பகவத் பாகவதவிஷயத்திலே வைக்கவேண்டிய மஹாவிஸ்வாஸத்தை மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.

நம்பிள்ளை ஈடு:- “ரத்நாபஹாரம்பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவுகாண அஞ்சுமோ? ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன், ஸாமாந்யர் ‘என்னது” என்று அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்லவேணுமோ?”

நம்புதல்-விரும்புதல்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”

இப்படியிருந்த நீர் ஆழ்வாரைக்கிட்டினபடி எங்ஙனே? என்று கேட்க; மடவார்களை ஆராதிப்பதற்காகப் பொருள்தேடிக் கொள்ளையடிப்பதற்கு இடம் பார்த்துத் திரியாநிற்கையில் அச்செம்பொன் மாடத்தைக் களவுகாணப் போனேன்; அங்கே வைத்தமாநிதியைக்கண்டு அகப்பட்டேனென்கிறார்; இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரேயாம்.

சதிர்த்தேன்-க்ருதக்ருத்யனானேன் என்றபடி. சதுர என்ற வடசொல் சதிர் எனத்திரிந்து அது அடியாகப்பிறந்த வினைமுற்று இது.

English Translation

The days I envied others’ pelf, and sought the love of lund dames! Now I have the Lord himself, who’s king of Kurugur city famed.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top