(864)
சலங்கலந்த செஞ்சடைக்க றுத்தகண்டன் வெண்டலைப்
புலன்கலங்க வுண்டபாத கத்தன்வன்து யர்கெட
அலங்கல்மார்வில் வாசநீர்கொ டுத்தவன்ன டுத்தசீர்
நலங்கொள்மாலை நண்ணும்வண்ண மெண்ணுவாழி நெஞ்சமே.
பதவுரை
| நெஞ்சமே! |
|
என்மனமே |
| வாழி |
– |
உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள் |
| சலம் கலந்த செம்சடை |
– |
கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும் |
| கறுத்த கண்டன் |
– |
(விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும் |
| புலன் கலங்க |
– |
ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு |
| வெண்தலை |
– |
வெளுத்துப்போன கபாலத்திலே |
| உண்ட |
– |
பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த |
| பாதகத்தான் |
– |
கோரமாதகியுள்ள சிவபிரானுடைய |
| வன்துயர்கெட் |
– |
வலிதான துக்கம் தீரும்படி |
| அலங்கல் |
– |
திருத்துழாய் மாலையையணிந்த |
| மார்வில் |
– |
திருமார்பினின்றும் |
| வாசம் நீர் |
– |
திவ்யபரிமளமான தீர்த்தத்தை |
| கொடுத்தவன் |
– |
அவனுக்கு ப்ரஸாதித்தருளி |
| அடுத்த சீர் |
– |
என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய |
| நலம்கொள் மாலை |
– |
ஆநந்தமயனான எம்பெருமானை |
| கண்ணும் வண்ணம் |
– |
அணுகும் வழியாகிற அவனது திருவருளையே |
| எண்ணு |
– |
அநுஸந்தித்து |
English Translation
The Ganga-bearing matted-hair Siva with blue throat and a skull, the senses – tamed mendicant, — he came to rid himself of ills. The Lord of fragrant-Tulasi chest, — he filled the skull with sap-of-heart. Now think O Heart the way to seek the feet of Lord who’s god in deeds.
