(855)

(855)

கடுங்கவந்தன் வக்கரன்க ரன்முரன்சி ரம்மவை

இடந்துகூறு செய்தபல்ப டைத்தடக்கை மாயனே

கிடந்திருந்து நின்றியங்கு போதும்நின்ன பொற்கழல்

தொடர்ந்துவிள்வி லாததோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே.

பதவுரை

கடு

க்ரூரனான
கவந்தன்

கபந்ததென்ன
வக்கரன்

தந்தவக்த்ரனென்ன
கரன்

கரனென்ன
முரன்  சிறை அவை

முரனென்ன (இவர்களுடைய தலைகளை
இடந்து கூறு செய்த

சிந்நபிந்நமாக்கினவனும்
பல்படை தடகை

பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
மாயனே

பெருமானே!
கிடந்து இருந்து நின்று இயங்குபோதும்

படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
நின்ன

தேவரீருடைய
பொன்கழல்

அழகிய திருவடிகளையே
தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி

இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
நலக் வேண்டும்

தந்தருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.

(கிடந்திருந்து இத்யாதி.) ****** என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும் ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.

English Translation

O Wonder-Lord with mighty arms that bear weapons in many forms! You killed and rolled the heads of all Kabanda, Vakradant, Mura. Your golden lotus feet I see in standing, sitting, sleeping pose. Pray make my thoughts to flow without a break on thee and thee alone!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top