(855)
கடுங்கவந்தன் வக்கரன்க ரன்முரன்சி ரம்மவை
இடந்துகூறு செய்தபல்ப டைத்தடக்கை மாயனே
கிடந்திருந்து நின்றியங்கு போதும்நின்ன பொற்கழல்
தொடர்ந்துவிள்வி லாததோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே.
பதவுரை
| கடு |
– |
க்ரூரனான |
| கவந்தன் |
– |
கபந்ததென்ன |
| வக்கரன் |
– |
தந்தவக்த்ரனென்ன |
| கரன் |
– |
கரனென்ன |
| முரன் சிறை அவை |
– |
முரனென்ன (இவர்களுடைய தலைகளை |
| இடந்து கூறு செய்த |
– |
சிந்நபிந்நமாக்கினவனும் |
| பல்படை தடகை |
– |
பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான |
| மாயனே |
– |
பெருமானே! |
| கிடந்து இருந்து நின்று இயங்குபோதும் |
– |
படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும் |
| நின்ன |
– |
தேவரீருடைய |
| பொன்கழல் |
– |
அழகிய திருவடிகளையே |
| தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி |
– |
இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை |
| நலக் வேண்டும் |
– |
தந்தருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.
(கிடந்திருந்து இத்யாதி.) ****** என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும் ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.
English Translation
O Wonder-Lord with mighty arms that bear weapons in many forms! You killed and rolled the heads of all Kabanda, Vakradant, Mura. Your golden lotus feet I see in standing, sitting, sleeping pose. Pray make my thoughts to flow without a break on thee and thee alone!
