(854)
திருக்கலந்து சேருமார்ப தேவதேவ தேவனே
இருக்கலந்த வேதநீதி யாகிநின்ற நின்மலா
கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்
உருக்கலந்தொ ழிவிலாது ரைக்குமாறு ரைசெயே.
பதவுரை
| திரு கலந்து சேரும் |
– |
பெரிய பிராட்டியார் நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற |
| மார்பு |
– |
திருமார்பையுடையனே! |
| தேவர் தேவர் தேவனே |
– |
ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே! |
| இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற |
– |
(பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான |
| நின் மலா |
– |
பரிசுத்தனே |
| கரு கலந்த |
– |
பொன்னோடு சேர்ந்த |
| காளமேகம் மேனி |
– |
காளமேகம்போன்ற திருமேனியையுடைய |
| ஆய |
– |
கண்ணபிரானே! |
| நின் பெயர் |
– |
உன் திருநாமஙக்ளை |
| ஒழிவு இலாது |
– |
நிரந்தரமாக |
| உரு கலந்து உரைக்கும் ஆறு |
– |
திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை |
| உரைசெய் |
– |
அருளிச் செய்யவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வார் தம்முடைய சரீரபந்தத்தை அறுத்து தந்தருள வேணுமென்று எம் பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் இப்போதே அது செய்யமாட்டானே; இந்த சரீரத்தோடே இவரைச் சிறிது காலம் வைத்து அநுபவிக்க விருப்பமுடையவனாதலால் ‘வேர்சூடுவார் மண்பற்றை உகுக்குமாபோலே’ இந்த ப்ராக்ருத சரீரத்தையே மிகவும் விரும்பியிருப்பவனிறே; அதனால், ‘ஆழ்வீர்! நீர் பிரார்த்திக்கிறபடி சரீரபந்தத்தை இப்போதே அறுத்துத் தர முடியாது; அதற்கு ஒரு காலவிசேஷம் உண்டு; பொறுத்திரும்’ என்ன; அப்படியாகில் தேவரீருடைய மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவழகுக்கும் வாசகமான திருநாமங்களையாவது அடியேன் இடைவிடாது அநுஸந்தித்துக் கொண்டிருக்கும்படி அருள்புரிய வேணுமென்று பிரார்த்திக்கிறார். இருக்கு+கலந்த = இருக்கலந்த; “சங்கு – கதை, சங்கதை” போல. மூன்றாமடியில், ஆய! என்பது ‘ஆயன்’ என்பதன் விளி. ஹிரண்யவர்ணையான பிராட்டி சேர்ந்த கரிய திருமேனிக்குக் கருக்கலந்த காளமேகத்தை ஒப்புச் சொல்லிற்று ஒக்கும். கரு- பொன்; மின்னலைச் சொல்லிற்றாகக் கொள்க. கரு என்று சர்ப்பத்தைச் சொல்லிற்றாகவுமாய்; நீர்நிறைந்த காளமேகமென்றபடி. உருக்கலந்து = திருநாம ஸங்கீர்த்தகம் பண்ணும்போது திவ்யமங்கள விக்ரஹாநுபவம் நடைபெறவேண்டுமென்ற ஆசை விளங்கும்.
English Translation
O Lord with Lady-Sri on chest, O Lord of gods, O god of gods! O Lord of spotless hue that is bespoken of in Vedas four! O Lord with hue the dark of cloud and aura of the golden sky! Pray make me prate your name and form without an end for all my life.
