(851)
பிறப்பினோடு பேரிடர்ச் சுழிக்கண்நின்றும் நீங்குமஃது
இறப்பவைத்த ஞானநீச ரைக்கரைக்கொ டேற்றுமா
பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம்
பெறற்கரிய மாயனே எனக்குநல்க வேண்டுமே.
பதவுரை
| பெறற்கு அரிய மாயனே |
– |
(ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே! |
| பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும் |
– |
பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும் |
| நீங்கும் அஃது |
– |
நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள் |
| இறப்ப வைத்த |
– |
மறந்தொழிந்த |
| ஞான நீசரை |
– |
ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை |
| கரை கொடு |
– |
ஏற்றம் ஆ |
|
கரையிலே கொண்டு சேர்க்கும்படியாக |
||
| பெறற்கு அரிய |
– |
துர்லபமான |
| சின்ன பாதம் பத்தி ஆன |
– |
உன் திருவடிகளில் பக்தியாகிற |
| பாசனம் |
– |
மரக்கல (ஓட) த்தை |
| எனக்கு நல்க வேண்டும் |
– |
அடியேனுக்கு அருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘என்னை நின்னுள் நீக்கல்’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘அழ்வீர்! அவிச்சிந்நமான திவ்ய ஸம்ச்லெஷத்தைப் பிரார்த்திக்கின்றீரே; அது பெறவேணுமானால் நீர் பரமபக்தியோடு கூடியிருக்க வேணுமே’ என்ன; அப்படிப்பட்ட பரமபக்தியையும் நீயே தந்தருளவேணுமென்று இரக்கிறார். தேவரீருடைய பாதாரவிந்தத்திலே பக்தியுண்டாவது ஸாமாந்யமல்ல; அஃது அனைவர்க்கும் எளிதில் பெறுதற்கு அரிது; அதனை அடியேனுக்கு நிர்ஹேதுகக்குபையினால் தந்தருளவேணுமென்று பின்னடிகளில் பிரார்த்திக்கிறார். அப்படிப்படட் பக்தி அடியேனுக்கு தேவரீர் அருளினால் அஃது என்னொருவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மாத்திரம் உபயுக்தமாகாது; அதனைக்கொண்டு பலநீசர்களை நான் கரையேற்றப் பார்ப்பேனென்கிறார் முன்னடிகளில்.
English Translation
Standing in the vortex of a painful life of birth and death, the feeble minded suffering souls can find a way to reach the shore, by holding on to Holy Feet with cords of faith unshakeable. O Lord in high and hard to get, you must begin to help me now.
