(832)

(832)

கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து

உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய்

மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம்

அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ

பதவுரை

கடைந்த

(கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட
பால் கடல்

திருப்பாற்கடலிலே
கிடந்து

கண்வளர்ந்தருளியும்
காலநேமியை

காலநேமியென்னுமசுரனை
கடிந்து

ஒழித்தருளியும்
உடைந்த

நடுங்கிக் கிடந்த

வாலி தந்தனுக்கு வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு

உதவ

உபகாரம் செய்ய
இராமன் ஆய் வந்து

இராமபிரானாய் வந்து தோன்றி
மிடத்தை

ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த
ஏழ் மரங்களும்

ஸப்தஸால வ்ருக்ஷங்களையும்
அடங்க

ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும்
எய்து

பாணத்தாலே துளைபடுத்தி
வேங்கடம் அடைந்த

திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான
மால

எம்பெருமானுடைய
பாதமே

திருவடிகளையே
நாளும்

நாள்தோறும்
அடைந்து

ஆச்ரயித்து
உய்ம்மின்

உஜ்ஜிவியுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம். உடைதல்- தளர்வு. வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்; எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன். ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பீனுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.

English Translation

O Lord in Milky Ocean-white, O Kalanemi-vanquisher! You came on Earth as Bow-Rama; you gave your word to Sugriva, and shot an arrow through the trees, O lord who lives in Venkatam! O people of the dainty Earth! Come, love the Lord and live again.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top