(832)
கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து
உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய்
மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம்
அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ
பதவுரை
| கடைந்த |
– |
(கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட |
| பால் கடல் |
– |
திருப்பாற்கடலிலே |
| கிடந்து |
– |
கண்வளர்ந்தருளியும் |
| காலநேமியை |
– |
காலநேமியென்னுமசுரனை |
| கடிந்து |
– |
ஒழித்தருளியும் |
| உடைந்த |
– |
நடுங்கிக் கிடந்த |
|
வாலி தந்தனுக்கு வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு |
||
| உதவ |
– |
உபகாரம் செய்ய |
| இராமன் ஆய் வந்து |
– |
இராமபிரானாய் வந்து தோன்றி |
| மிடத்தை |
– |
ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த |
| ஏழ் மரங்களும் |
– |
ஸப்தஸால வ்ருக்ஷங்களையும் |
| அடங்க |
– |
ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும் |
| எய்து |
– |
பாணத்தாலே துளைபடுத்தி |
| வேங்கடம் அடைந்த |
– |
திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான |
| மால |
– |
எம்பெருமானுடைய |
| பாதமே |
– |
திருவடிகளையே |
| நாளும் |
– |
நாள்தோறும் |
| அடைந்து |
– |
ஆச்ரயித்து |
| உய்ம்மின் |
– |
உஜ்ஜிவியுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம். உடைதல்- தளர்வு. வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்; எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன். ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பீனுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.
English Translation
O Lord in Milky Ocean-white, O Kalanemi-vanquisher! You came on Earth as Bow-Rama; you gave your word to Sugriva, and shot an arrow through the trees, O lord who lives in Venkatam! O people of the dainty Earth! Come, love the Lord and live again.
