(83)
அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.
பதவுரை
| அளந்திட்ட |
– |
(தானே) அளந்துகட்டின |
| தூணை |
– |
கம்பத்தை |
| அவன் |
– |
அந்த ஹிரண்யாஸுரன் (தானே) |
| தட்ட |
– |
புடைக்க |
| ஆங்கே |
– |
(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே |
| வான் உகிர் |
– |
கூர்மையான நகங்களையுடைய |
| சிங்கம் உருஆய் |
– |
நரஸிம்ஹ மூர்த்தியாய் |
| வளர்ந்திட்டு |
– |
வளர்ந்த வடிவத்துடன் தோன்றி |
|
(ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று) |
||
| உளம் |
– |
(அவ்விரணியனது) மநஸ்ஸு |
| தொட்டு |
– |
பரிசோதித்துப் பார்த்து (பின்பு) |
| இரணியன் |
– |
அவ்விரணியனுடைய |
| ஒளி |
– |
ஒளி பொருந்திய |
| மார்பு அகலம் |
– |
மார்பின் பரப்படங்கலும் |
| பிளந்திட்ட |
– |
(நகத்தாற்) பிளந்த |
|
கைகளால் சப்பாணி |
||
| பேய் |
– |
பேய்மகவான பூதனையின் |
| முலை |
– |
முலையை |
| உண்டானே |
– |
உண்டவனே! |
|
சப்பாணி-; |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – அளந்திட்ட தூணாவது – முன்பே நரசிங்கமூர்த்தியை உள்ளே வைத்துக்கட்டிய தூண் என்று சொல்லமுடியாதபடி தானே தனக்குப் பொருந்தப் பார்த்துக் கட்டினது. தூண் – ‘ஹூணா’ என்ற வடசொல் விகாரம். அவன் தட்ட – கையிலே நரசிங்கத்தை அடக்கி வைத்துக்கொண்டு வந்து பாய்ச்சினார்கள் என்றுவொண்ணாதபடி தானே அழன்று புடைக்கவென்கை. உளம் – உள்ளம் என்பதன் தொகுத்தல். ஒன்மார்பென்ற – நரஸிம்ஹத்தினுடைய கோபாக்னியாலும் தன் வயிற்றிலுள்ள பயாக்கியாலும் பிறந்த பரிதாபத்தாலே பொன்மயமான மார்பு உருகி ஒளிவிட்டு உகிரால் எளிதாகக் கிழிக்கும்படியாயிற்றென்ற கருத்தைக் காட்டும். மார்பு அகலம் – அகலமான மார்பு என்றுமாம்.
English Translation
These are the hands that tore into the wide chest of Hiranya Kasipu,–you appeared as a fierce lion with sword-sharp claws and struck terror in his heart,–when he pointed at a pillar and smote it. Clap Chappani. O Lord, you sucked the ogress’s breast, clap Chappani.
