(82)

(82)

குரக்கினத் தாலே குரைகடல் தன்னை

நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை

அரக்கர் அவிய அடுகணை யாலே

நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.

பதவுரை

குரை

கோக்ஷியா நின்ற
கடல் தன்னை

ஸமுத்ரத்தை
நெருக்கி

(இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு

குரங்குகளினுடைய
இனத்தாலே

கூட்டங்களைக் கொண்டு
அணைகட்டி

ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்

பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை

லங்கையிலுள்ள
அரக்கர்

ராக்ஷஸர்களெல்லாம்
அலிய

அழிந்துபோம்படி
அடு கணையாலே

கொல்லும் தன்மையையுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய

நெருங்கப் போர் செய்த

கைகளால் சப்பாணி-;

வேலி

திருவாழி ஆழ்வானை
அம் கையனே

அழகிய கையிலேந்தினவனே!

சப்பாணி-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – வாநரப்படைகளைத் துணைகொண்டு கடலில் ஸேதுகட்டின கைகளாலே சப்பாணி கொட்டவேணுமென்கிறாள்.  குரங்கு + இனம் = குரக்கினம்;  வேற்றுமைப் புணர்ச்சியில் மென்றொடர் வன்றொடராயிற்று; “மென்றொடர் மொழியுட் சில வேற்றுமையில் தம்மினவன்றொடர்” என்னுஞ் சூத்திரவிதி அறிக.  குரைகடல் – வினைத்தொகை.  நீர் – கடலுக்கு ஆகுபெயர்.  அரக்கர் – ‘ரக்ஷ: ’ என்ற வடசொல் திரிபு.

English Translation

These are the hands rained arrows and destroyed the Rakshasas of Lanka, after building a bridge across the ocean strait with a monkey army.  Clap Chappani.  O, Lord who wields the discus, clap Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top