(799)

(799)

குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்துமண்

ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து

பன்றியாய் நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு

அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

குன்றில் நின்று

திருவேங்கடமலையில் நின்றும்
வான் இருந்து

பரமபதத்தில் வீற்றிருந்தும்
நீள் கடல் கிடந்து

பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும்
மண் ஒன்று சென்று

இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும்
ஒன்று அதை உண்டு

மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும்
ஒன்று அது பன்றி ஆய் இடந்து

மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும்
கன்று சென்ற நாள் அவற்றுள்

கன்றாய் சென்ற நாட்களிலே
நல் உயிர் படைத்து

நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும்
அன்று

அப்போது
அவர்க்கு

அந்த மனிதர்கட்கு
தேவு

(தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை
அமைத்து

ஏற்படுத்தியும் (இப்படிகளாலே)
அளித்த

நன்மை செய்தருளின
ஆதிதேவன் இல்லையே

பரமபுருஷன் நீயேகாண்.
பாட்டு

மன்னுமாமலர்

English Translation

You stand on hill, you sit in sky, you sleep in sea and walk the Earth, O Lord who came as boar in time and lifted Dame Earth like a clod! O Lord who swallowed all the earth and brings them all out once again, O Lord who made the Maker too and watches over all the gods!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top