(798)

(798)

காரொடொத்த மேனிநங்கள் கண்ணவிண்ணிண் நாதனே

நீரிடத்த ராவணைக்கி டத்தியென்பர் அன்றியும்

ஓரிடத்தை யல்லையெல்லை யில்லையென்ப

ராதலால் சேர்விடத்தை நாயினேன் தெரிந்திறைஞ்சு மாசொலே.

பதவுரை

காரொடு ஒத்த மேனி

காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய்
நங்கள் கண்ண

எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே!
விண்ணின் நாதனே

நித்யஸூரிகட்குத் தலைவனே!
நீர் இடத்து

(நீதி) திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே
கிடத்தி

பள்ளிகொண்டருளா நின்றாய்
என்பர்

என்று (ஞானிகள்) சொல்லுவார்கள்
அன்றியும்

அது தவிரவும் (நீ)
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை.
எல்லை இல்லை

(நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை.
என்பர்

என்றும் சொல்லுவார்கள்
ஆதலால்

இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே
காயினேன்

மிகவும் நீசனாகிய அடியேன்.
சேர்வு இடத்தை தெரிந்து

ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு
இறைஞ்சும் ஆ

ஆச்ரயிக்கலாம்படியை
சொல்

அருளிச் செய்யவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமா சொல்” என்று பிரார்த்தித்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! பரவ்யூஹ விபவங்களென்ற நமது நிலைகள் ஆச்ரயிக்கத்தக்க ஸ்தலங்களன்றோ? அவற்றில் ஒரு நிலையைப் பற்றி யாச்ரயித்து நன்மை பெற்றுப்போம்” என்றருளிச்செய்ய; அந்த நிலைகள் அடியேனுக்கு ஆச்ரயனார்ஹமான நிலங்களல்ல; மிகவும் நிஹீகநனான அடியேன் ப்ரதிபத்திபண்ணி ஆச்ரயிக்கத்தக்கதோரிடத்தை அருளிச் செய்யவேணுமென்கிறார்.

ஓரிடத்தை அல்லை= இன்னஸ்தலமென்று குறிப்பிடக்கூடிய ஓரிடத்தை இருப்பிடமாகவுடைந்தாயிருக்கின்றாயில்லை. ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதபடி அந்தர்யாமியாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தனாய் இராநின்றாய் என்றபடி. எல்லையில்லை என்பர் = தஹாவித்யை,சாண்டில்பவிதத்யை, வைச்வாநரவித்யை உபகோஸலவித்யை என்றாப்போலே சொல்லப்படுகிற வித்யைகளுக்கு எல்லையில்லாமையாலே அவற்றில் சொல்லப்படுகிற ஆச்ரணிய ஸ்தலங்கட்கும் எல்லை என்கை.

ஆகையால் = இப்படி, பரமபதம் தேசத்தால் விப்ரக்ருஷ்டமாய், க்ஷீராப்தி அதிக்ருதாதிகாரமாய், அந்தர்யாமித்வம் ப்ரதிக்கே ட்டாததாய் ஆச்ரயணீயஸ்தலம் அபரிச்சேத்யமாயிருக்கையாலே என்றவாறு. அயோக்யனான அடியேன் “இது நமக்கு ஆச்ரயணார்ஹமான ஸ்தலம்” என்று ஓரிடத்தை நிஷ்கர்ஷித்து ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப்போம்படியாக ஓரிடத்தைக் காட்டிக்கொடுக்க வேணுமென்று தலைக்கட்டுகிறார். ஓரிடத்தை = ‘ஓரிடத்தன்’ என்பதன் முன்னிலையுருவம்.

English Translation

O Lord the hue of laden cloud, O Lord of gods and dear to us! Through they say you lie in their on snake in ocean-deep alone, you defy the thoughts of all and all the bounds of space and time. So tell me where I am to see you, Lord so dear as eyes to me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top