(798)
காரொடொத்த மேனிநங்கள் கண்ணவிண்ணிண் நாதனே
நீரிடத்த ராவணைக்கி டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை யில்லையென்ப
ராதலால் சேர்விடத்தை நாயினேன் தெரிந்திறைஞ்சு மாசொலே.
பதவுரை
| காரொடு ஒத்த மேனி |
– |
காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய் |
| நங்கள் கண்ண |
– |
எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே! |
| விண்ணின் நாதனே |
– |
நித்யஸூரிகட்குத் தலைவனே! |
| நீர் இடத்து |
– |
(நீதி) திருப்பாற்கடலிலே |
| அரா அணை |
– |
திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே |
| கிடத்தி |
– |
பள்ளிகொண்டருளா நின்றாய் |
| என்பர் |
– |
என்று (ஞானிகள்) சொல்லுவார்கள் |
| அன்றியும் |
– |
அது தவிரவும் (நீ) |
| ஓர் இடத்தை அல்லை |
– |
ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை. |
| எல்லை இல்லை |
– |
(நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை. |
| என்பர் |
– |
என்றும் சொல்லுவார்கள் |
| ஆதலால் |
– |
இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே |
| காயினேன் |
– |
மிகவும் நீசனாகிய அடியேன். |
| சேர்வு இடத்தை தெரிந்து |
– |
ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு |
| இறைஞ்சும் ஆ |
– |
ஆச்ரயிக்கலாம்படியை |
| சொல் |
– |
அருளிச் செய்யவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமா சொல்” என்று பிரார்த்தித்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! பரவ்யூஹ விபவங்களென்ற நமது நிலைகள் ஆச்ரயிக்கத்தக்க ஸ்தலங்களன்றோ? அவற்றில் ஒரு நிலையைப் பற்றி யாச்ரயித்து நன்மை பெற்றுப்போம்” என்றருளிச்செய்ய; அந்த நிலைகள் அடியேனுக்கு ஆச்ரயனார்ஹமான நிலங்களல்ல; மிகவும் நிஹீகநனான அடியேன் ப்ரதிபத்திபண்ணி ஆச்ரயிக்கத்தக்கதோரிடத்தை அருளிச் செய்யவேணுமென்கிறார்.
ஓரிடத்தை அல்லை= இன்னஸ்தலமென்று குறிப்பிடக்கூடிய ஓரிடத்தை இருப்பிடமாகவுடைந்தாயிருக்கின்றாயில்லை. ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதபடி அந்தர்யாமியாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தனாய் இராநின்றாய் என்றபடி. எல்லையில்லை என்பர் = தஹாவித்யை,சாண்டில்பவிதத்யை, வைச்வாநரவித்யை உபகோஸலவித்யை என்றாப்போலே சொல்லப்படுகிற வித்யைகளுக்கு எல்லையில்லாமையாலே அவற்றில் சொல்லப்படுகிற ஆச்ரணிய ஸ்தலங்கட்கும் எல்லை என்கை.
ஆகையால் = இப்படி, பரமபதம் தேசத்தால் விப்ரக்ருஷ்டமாய், க்ஷீராப்தி அதிக்ருதாதிகாரமாய், அந்தர்யாமித்வம் ப்ரதிக்கே ட்டாததாய் ஆச்ரயணீயஸ்தலம் அபரிச்சேத்யமாயிருக்கையாலே என்றவாறு. அயோக்யனான அடியேன் “இது நமக்கு ஆச்ரயணார்ஹமான ஸ்தலம்” என்று ஓரிடத்தை நிஷ்கர்ஷித்து ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப்போம்படியாக ஓரிடத்தைக் காட்டிக்கொடுக்க வேணுமென்று தலைக்கட்டுகிறார். ஓரிடத்தை = ‘ஓரிடத்தன்’ என்பதன் முன்னிலையுருவம்.
English Translation
O Lord the hue of laden cloud, O Lord of gods and dear to us! Through they say you lie in their on snake in ocean-deep alone, you defy the thoughts of all and all the bounds of space and time. So tell me where I am to see you, Lord so dear as eyes to me!
