(765)
தூய்மையோக மாயினாய்து ழாயலங்கல் மாலையாய்
ஆமையாகி யாழ்கடல்து யின்றவாதி தேவநின்
நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்
சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே
பதவுரை
| தூய்மை யோகம் ஆயினாய் |
– |
ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே! |
| துழாய் அலங்கல் மழையாய் |
– |
திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே! |
| ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ! |
– |
கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே! |
| நின் நாமதேயம் |
– |
உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள் |
| இன்னது என்ன |
– |
இன்னின்னவை யென்று சொல்ல |
| வல்லம் அல்ல ஆகிலும் |
– |
யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும் |
| சாம வேத கீதன் ஆய |
– |
ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான |
| சக்ர சாபி அல்லையே |
– |
கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நம் அவதாரரஹஸ்யத்தை நீர் அறிந்தபடி யென்?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, “ப்ரயோஜநாந்தரபரர்க்காக இதரஸாஜாதீயராகத் திர்யக்யோநியிலே திருவவதரித்தருளின தேவரீருடைய குணசேஷ்டிதங்களை அடியேன் பரிச்சேதித்து அறியமாட்டேனேலும் அவ்வழக்கு ***- என்றறிந்தேன்” என்கிறார்.
தூய்மை யோகமாயினாய்! = அசித்ஸம்ஸர்க்கத்தாலே அசுத்தனான ஸம்ஸாரிக்கு உன் “க்ருபையாலே அந்த அசித்ஸம்ஸர்வர்க்கத்தை யறுத்து நித்யஸூரிகளோடே சேர்த்து உன்னை அநுபவிப்பிக்கவல்ல சுத்தியோகத்தையுடையவனே! என்படி. (நின்நாமதேயம் இத்யாதி.) நாமதேயமாவது- குணங்களையும், சேஷ்டிகளையும் சொல்லுகிற திருநாமம். ஆயினும் இச்சொல் இங்கு இலக்கணையால் திருநாமவாச்யமான குணசேஷ்டிதஙக்ளையே சொல்லக்கடவ’தாமென்பர். “நின்னாமதேயமென்று-வாச்யமான குணசேஷ்டிதங்களை ***-கமான சப்தத்தாலே லக்ஷிக்கிறது” என்ற வியாக்கியான ஸூக்தி காண்க. உன்னுடைய எண்ணில் பல்குணங்களையும் இன்புறு மிவ் விளையாட்டுகளையும் இவை யிவையென்று பகுத்துச் சொல்ல அடியேன் அமஸமர்த்தனேயாகிலும் என்றவாறு.
சாமவேதநீதனாய சக்ரபானியல்லையே = நீ பரிக்ரஹித்தருளின் கூர்மவிக்ரஹம் ஸாமாக்யமானதல்லவென்றும் ஸாக்ஷாரத் ***- மாய்க் கையுந்திருவாழியுமான அதிரமணீய ஹிரண்மயவிக்ரஹம் என்றும் அறிந்தேனென்கை.
English Translation
O Lord with sacred Basil wreath, O Lord of Yogic purity! O Lord-in-ocean deep asleep, O Lord who came as turtle here! Although we cannot call you by a name as all the mortals have, we know you as the discus-lord as spoken of in Sama-Ved.
