(765)

(765)

தூய்மையோக மாயினாய்து ழாயலங்கல் மாலையாய்

ஆமையாகி யாழ்கடல்து யின்றவாதி தேவநின்

நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்

சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே

பதவுரை

தூய்மை யோகம் ஆயினாய்

ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய்

திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!

கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம்

உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன

இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும்

யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய

ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர சாபி அல்லையே

கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “நம் அவதாரரஹஸ்யத்தை நீர் அறிந்தபடி யென்?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, “ப்ரயோஜநாந்தரபரர்க்காக இதரஸாஜாதீயராகத் திர்யக்யோநியிலே திருவவதரித்தருளின தேவரீருடைய குணசேஷ்டிதங்களை அடியேன் பரிச்சேதித்து அறியமாட்டேனேலும் அவ்வழக்கு ***- என்றறிந்தேன்” என்கிறார்.

தூய்மை யோகமாயினாய்! = அசித்ஸம்ஸர்க்கத்தாலே அசுத்தனான ஸம்ஸாரிக்கு உன் “க்ருபையாலே அந்த அசித்ஸம்ஸர்வர்க்கத்தை யறுத்து நித்யஸூரிகளோடே சேர்த்து உன்னை அநுபவிப்பிக்கவல்ல சுத்தியோகத்தையுடையவனே! என்படி. (நின்நாமதேயம் இத்யாதி.) நாமதேயமாவது- குணங்களையும், சேஷ்டிகளையும் சொல்லுகிற திருநாமம். ஆயினும் இச்சொல் இங்கு இலக்கணையால் திருநாமவாச்யமான குணசேஷ்டிதஙக்ளையே சொல்லக்கடவ’தாமென்பர். “நின்னாமதேயமென்று-வாச்யமான குணசேஷ்டிதங்களை ***-கமான சப்தத்தாலே லக்ஷிக்கிறது” என்ற வியாக்கியான ஸூக்தி காண்க. உன்னுடைய எண்ணில் பல்குணங்களையும் இன்புறு மிவ் விளையாட்டுகளையும் இவை யிவையென்று பகுத்துச் சொல்ல அடியேன் அமஸமர்த்தனேயாகிலும் என்றவாறு.

சாமவேதநீதனாய சக்ரபானியல்லையே = நீ பரிக்ரஹித்தருளின் கூர்மவிக்ரஹம் ஸாமாக்யமானதல்லவென்றும் ஸாக்ஷாரத் ***- மாய்க் கையுந்திருவாழியுமான அதிரமணீய ஹிரண்மயவிக்ரஹம் என்றும் அறிந்தேனென்கை.

English Translation

O Lord with sacred Basil wreath, O Lord of Yogic purity! O Lord-in-ocean deep asleep, O Lord who came as turtle here! Although we cannot call you by a name as all the mortals have, we know you as the discus-lord as spoken of in Sama-Ved.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top