(75)

(75)

மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்

ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி

பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு

காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி.

பதவுரை

ஆணிப்பொன்னால் செய்த

மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்

(வேலைப்பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி

பொன்மணிக் கோவையை
உடை

உடைய
மருங்கின்மேல்

இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி

(உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச்சதங்கை
ஆர்ப்ப

ஒலி செய்யவும்
பவளம்

பவழம்போன்ற
வாய்

வாயிலே
முத்து

முத்துப்போன்ற பற்கள்
இலங்க

விளங்கவும்
பண்டு

முற்காலத்திலேயே
காணி

பூமியை
கொண்ட

(புவிச்சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்

திருக்கைகளாலே
பேணி

விரும்பி
சப்பாணி

சப்பாணிகொட்டியருள வேணும்;
கரு

கருநிறமான
குழல்

கூந்தலையுடைய
குட்டனே

பிள்ளாய்!
சப்பாணி

சப்பாணி கொட்டியருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – அரைச்சதங்கைகள் தொனிக்கவும் வாயிலே முத்துப்போன்ற பற்கள் விளங்கவும் திருக்கைகளாலே சப்பாணி கொட்டவேணுமென்கிறார் பிறருடைய காரியம் செய்வதேயன்றோ உன் கைகளுக்குத் தொழில் என்பார் ‘பண்டு காணிகொண்ட கைகளால்’ என்றார்.

English Translation

O, dark dressed One, wearing a beautiful waistband of gold, and jeweled ankle-bells that chime, flashing a pearly smile over charming coral lips! With hands that took the Earth as gift from Mahabali, clap Chappani, come clap you hands, Chappani.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top