(46)

(46)

என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு

சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,

இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி

தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!

பதவுரை

எம்தம் பிரானார்

எமக்கு ஸ்வாமியாய்
எழில்

அழகிய
திருமார்வார்க்கு

திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய

நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு

தாமரைபோன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்

தேவேந்த்ரனானவன்
எழில் உடை

அழகையுடைய
கிண்கிணி

கிணிகிணியை
தந்து

கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்

அதோயிரா நின்றான்

தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ. . .

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இந்திரன் அரைச்சதங்கையைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்து அதோ நிற்கின்றான்காண் என்று சொல்லித் தாலாட்டுகிறாள்.  முன்னிரண்டடிகளும் படர்க்கையாயிருந்தாலும் முன்னிலைப் படர்க்கையெனக் கொள்க.  எழில் திருமார்வனும் தாமரைத்தாளனுமான உனக்கு என்றபடி.  ‘கிண்கிண்’ என்று ஒலிப்பதுபற்றிச் சதங்கைக்குக் கிண்கிணி என்று காரணப் பெயராயிற்று.  உவன் – நடுவிலிருப்பதைக் காட்டுஞ் சுட்டெழுத்தான ‘உ’ என்பதனடியாய் பிறந்த ஆண்பாற் பெயர்; அதிக தூரத்திலும் அதிக ஸமீபத்திலுமில்லாமல் நடுத்தரமாய் இருப்பவனென்று பொருள்.

English Translation

For my master of radiant chest and beautiful lotus feet, Indra gave these ankle-bells, and stands betwixt, Talelo.  O, Lotus-eyed Lord, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top