(403)

(403)

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்

இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்

மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்

சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.

பதவுரை

பிறப்பு அகத்தே

ஸூதிகாக்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த

இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்

புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்

ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து

(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து

மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த

(இப்பிள்ளைகள் எம்பிள்ளைகள்தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்

சத்தியந்தன் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்

தீருப்பதியாவது:
மறை

வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பொருந்தி

சிறந்த (மூன்று)  அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்

(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
எரு

(தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை

அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்

ஆதரித்துப்வோருமவர்களும்
சிறப்பு உடைய

(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான

களையுடையவர்களுமான

மறையவர்

வைதிகர்கள்
வாழ்

வாழப்பெற்ற

திரு அரங்கம் என்பதுவே….

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதில் முன்னோடிகளிற் கூறிய வரலாறு, கீழ் முதற்பத்தில் உய்யவுலகில், “துப்புடையாயர்கள் தம்” என்ற பாட்டின் உரையில்  விரித்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாமடியில், விருந்து என்ற சொல் ஆகுபெயரால் விருந்தினரை உணர்த்துகிறது.      …    ….    …..   (உ)

English Translation

Vedic seers of eminence, who perform fire-sacrifices and respectfully offer food to unexpected guests, reside in Tiru-Arangam. It is the abode of the Lord who is a trice brought back the four infants, –that had died in the delivery room, and restored them to their parents.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top