(396)

(396)

தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு

மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு

அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

பதவுரை

அரு தவம் முனிவர்

அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள்
அலைப்பு உடை

அலைத்தலையுடைய (கரையெறியா நின்றுள்ள)
திரைவாய்

அலையிலே
அவபிரதம் குடைந்து ஆட

அவப்ருதஸ்நாசம் பண்ண, (பிறகு பெருங்காறாய்)
கலப்பைகள் கொழிக்கும்

(யாகபூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லாவற்றையும் எடுத்துத் தள்ளிக்கொண்டு போகா நிற்கிற

கங்கையின் கரை மேல்

கண்டம் என்னும் கடி நகர் ;

சலம்

(கடலிலுள்ள) ஜலத்தை
பெதி

பொதிந்துகொண்டிரா நின்ற
மேகம்

மேகங்களானவை
தலைப்பெய்து

திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி

கர்ஜனைபண்ணி
சலசல பொழிந்திட

சள சள வென்று மழை பொழிய
கண்டு

(அதைக்) கண்டு
மலை

கோவர்த்தன மலையாகிற
பெருகுடையான்

பெரிய குடையாலே
மறுத்தவன்

(அம்மழையைத்) தடுத்தருளினவனும்
மதுஐர

திரு வடமதுரையில்
மால்

விருப்பமுடையவனுமான
புருடோத்தமன்

ஸ்ரீபுருஷோத்தமப்பெருமான்
வாழ்வு

எழுந்தருளியிருக்குமிடம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளில் கூறிய கோவர்த்தநோத்தரண வரலாறு கீழ்ப்பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டது. சலசல – ஒலிக்குறிப்பு. மறைத்தவன் என்றும் பாடமுண்டென்பர்.

பின்னடிகளின் கருத்து; – தபஸ்விகளான மஹர்ஷிகள் பகவத்ஸமாராதந ரூபங்களான யாகங்களைக் குறையற அனுட்டித்து, அத்திமதிநத்தில் அவப்ருத ஸ்தாகஞ்செய்ய, அநந்தரம் பெருக்காறாப்பெருக்கி யாகபூமிலுள்ள கலப்பை முதலிய உபகரணங்கள ளெல்லாவற்றையும் எடுத்துத்தள்ளிக்கொண்டு போகாநிற்குமதான கங்கைக்கரையிலுள்ள கண்டமென்னும் நடிகர் என்பதாம்.  அவபிரதம்- வேள்வியின் முடிவிற் செய்யவேண்டிய ஸ்நாகம்; …………………… என்ற வடசொல் விகாரம்

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga in whose powerful surge; great sages take their ritual bath after a fire-sacrifice and bring back driftwood for making sacrificial ladles. It is the abode of our dear Purushottama, Lord of Mathura, who held a mountain as an umbrella against the laden clouds when they poured incessantly with thunder.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top