(3930)
பணிநெஞ்சே! நாளும் பரம பரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே.
பதவுரை
|
மணிநின்ற சோதி |
– |
நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய் |
|
பிறவி கெடுத்து ஆளும் |
– |
நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன் |
|
மதுசூதன் |
– |
விரோதி நிரஸந சீலனாய் |
|
என் அம்மான் |
– |
அஸ்மத் ஸ்வாமியாய் |
|
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான் |
– |
தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான் |
|
பிணி ஒன்றும் சாரா |
– |
ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது |
|
பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி |
– |
(ஆன பின்பு) அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
**** – நம் விரோதிகளைப் போக்கி அடிமைகொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார். நெஞ்சே! பரமபரம்பரனை நாளும்பணி – நெஞ்சே! நல்ல வாய்ப்பாயிருந்தது, நாள்தோறுமநுபவிக்கப் பார்; இந்திரன் முதலானார்க்கு மேற்பட்டவர்களான (பிரமன் முதலானார்க்கும் மேற்பட்டவர்களான) நித்யஸூரிகளுக்குத் தலைவனை நாளுமநுபவிக்கப்பார். பிணியென்றும் சாரா – துக்கங்களொன்றும் நம்மை வந்து கிட்டாது. பிறவி கெடுத்து ஆளும் – அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தை அடிவேரோடே போக்கி நம்மை நித்திய கைங்காரியம் கொள்ளுபவன் மணி நின்ற சோதி – துக்கங்களையும் துக்கஹேதுவான ஜன்மத்தையும் போக்குகின்றிலன் என்றே வைத்துக்கொள்வோம்; அப்படியானாலும் விடவொண்ணாத வடிவழகு படைத்தவன். நீலமணியினொளியை வடிவாக வகுத்தாற்போலே யிருக்கிற வடிவையுடையவன். மதுசூதன் – மதுகைடபர்களைக் கொன்றானென்பது மாத்திரம் இங்கு விவஷிதமன்று கீழ்ச்சொன்ன வடிவழகை யநுபவிப்பார்க்கு வரும் விரோதிகளை மதுகைடபர்களைப் போக்கினாப் போலே தள்ளிக் கொடுக்குமவன் என்று விவஷிதம்.
அணி நின்ற செம்பொனடலாழியானே – கையுந்திருவாழியுமான அழகை நமக்கு அநுபவிக்கக் கொடுப்பானென்று கருத்து. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை நெஞ்சே! நாளும் பணி என்றாராயிற்று.
English Translation
O Heart! Worship the greatest good. Diseases will not come close and birth too will cease. The Lord of gem-hue radiance bears a golden discus. He is Madhusudana, the Lord who rules us
