(3922)

(3922)

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்

தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்

உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்எ டை யாவிவேமால்

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே.

 

பதவுரை

செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே

சிவந்த கனிபோன்ற அதரத்தையுடைய எங்களாயர் குலக்கொழுந்தே!

உடன் திரிகிலையும் என்றெனறு

அவனோடுங் கூடித் திரியமாட்டாய் நீ யென்று இதைப் பலகாலும் நினைத்து

வகையர் அசுரர்கள்

வலிமை மிக்க அசுரர்கள்

கஞ்சன் ஏவ

கம்ஸனுடைய ஏவுதலால்

என்னுடை ஆவி ஊடுறவேம்

என்னெஞ்சு உள்உற வேவா நின்றது;

தவத்தவர் மறுக நின்று –உழிதருவர்

முனிவர்கள் குடல் குழம்பும்படி திரிவர்கள்

அந்தோ என் சொல் கொள்

நீயோ! என் சொல்லைக் கொள்ளாய்;

உனக்கு தனிமையும் பெரிது

நீயோ மிகவும் துணையற்றிரா நின்றாய்;

திவத்திலும்

திருநாட்டிலிருப்பதிற் காட்டிலும்

இராமனையும் உவர்த்தலை

( உனக்குத் துணைவனான) பலராமனையும் நீ உகவாதவனாய்

பசு நிரை மேய்ப்பு உவத்தி

பகூட்டங்களை மேய்ப்பதையே நீ உகக்கின்றாயே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * … “அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள்.

செங்கனிவாயெங்களாயர் தேவே! அவத்தங்கள் விளையும்… உன்னழகுக்குக் கண்ணெச்சில் பட்டுத் தீருங்காண் என்கிறார்கள். அசுரர்கள் வன்கையர்… அசுர ஜாதி இயற்கையாகவே பொல்லாது; அதகு மேலே ( கஞ்சனோ) * கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் வஞசிப்பதற்கு விடுத்தா னென்பதோர் வார்த்தையு முண்டாகையாலே அந்த கம்ஸப்ரேரணையினால் மிவும் கடியர்: உனக்கு என் வருகிறதோ வென்று தஹர்ஷிகளுங்கூடக் கலங்குவர்; நம்பி மூத்தபிரானர்வது உன்னைவிட்டுப் பிரியாது உனக்ககுத் துனைவனாயிருந்தால் அவருடைய காவலுண்டென்று ஒருவாறு ஆறியிருப்போம்; நீயோ அவன் கூட விருந்தால் தீம்பு செய்யப் போகாதென்று அவனை விட்டகன்றே திரிவாய்; * மைந்நம்புவேற்கண்ணல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன்மாமேனித் தன்னம்பு நம்புயுமிங்கு வளர்ந்தது அவனிவை செயதறியான்* என்று இச்சேர்யில் நல்லபேர் பெற்றிருக்கின்ற நம்பிமூத்தபிரானை உடன் கொண்டு திரியமாட்டாய்;  அவனோடு நீ பொருந்துவாயல்லை; * அண்ணற்கு அண்ணாணோர் மகனைப் பெற்ற* என்னும்படி யிராநின்றாய்; இதையெல்லாம் நினைக்க நினைக்க என்னுடைய ஹ்ருதயமானது வேவா நின்றது.

என்று சொன்னவாறே, கண்ணன் “ நான் போனாலன்றோ இப்படி பயப்பட வேண்டுவது; இதென்ன அன்பு தான்’’ என்று முறுவல் செய்ய,  செங்கனினாயெங்களாயர்தேவே; திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி… * ஹஸந்நிவ ந்ருபபோ ஹந்தி என்னுமா போலே சிரித்தே எங்கள் குடியைக் கெடுக்கிறாயே; பரமபதத்தி லிருப்யிலுங் காட்டில் உனக்குப் பசு மேய்க்கையிலன்றோ மிக விருப்பமுள்ளது; நீயோ போகாதிருக்கப் போகிறாய்! என்கிறார்கள்.

வன்கையர்…  வன்மையை யுடைவர்; வன்கை.. வன்மை. தவத்தவர் மறுக நீன்று என்பதற்கு இரண்டுகடியாகப்பொருள் கொள்ளலாம்! ‘கண்ணபிரானுக்கு என்வருகிறதோ வென்று குடல்மறுக என்பது ஒரு பொருள்; * ஏ ஹி பச்ய சரீராணி* என்பவர்களாகையாலே தங்களுடலுக்கு; வரும் கேடுகளை நினைத்துக் குடல் மறுக என்பத மற்றொரு பொருள் “உனக்கென்வருகிறதோவென்று ர்உகளுங் கூட’ கலங்குவர்ககள்’’ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். மூன்றாமடியின் முதல் சொல், உவத்தலை, உவர்த்தலை என்று இரு வகையாகக் காண்கிறது.

திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி என்றவிடத்து திவத்திலும் என்ப¬‘த ஐந்தாம் வேற்றுமையாகக் கொள்வதும் ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதுமாக இரண்டு நிர்வாஹங்களுள்ளன. (1) பரமபதத்திலிருப்பதைக் காட்டிலும் பசுநிரை மேய்ப்பதை உகக்கின்றாய்; (2) பரமபதத்தில் வஸிக்கும் போதும் பசுமேய்பபதிலேயே உகப்பிடையை; அங்கும் டீயோ டீயோ வென்று வாய்வெருவாநின்றாய் என்கை.

 

English Translation

Wicked Asuras sent by Kamsa roam and disturb the Rishis, take heed, Oh!  You like to go alone; you do not care for Balarama or his company. Alas, my feetlings scorch my soul.  O My Krishna, our cowherd Lord of coral lips, you prefer grazing cows to even Vaikunta!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top