(386)

(386)

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு

கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராஎன்று

நாடுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.

பதவுரை

நாடும்

குக்ராமங்களிலுள்ள ஸாமாந்யஜ்ஞானிகளும்
அறிய

(இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
மானிடர் பேர் இட்டு

(ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி

அவர்களோடு கூடி
அழுங்கி

ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து

(அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே

தவறிப்போகாமல்,
சாடு

‘சகடாஸுரன்
இற

முறியும்படி
பாய்ந்த

உதைத்தருளின
தலைவா

பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று

‘தாமோதரனே! என்றும்
நாடுமின்

வாழ்த்திக்கொண்டு திரியுங்கள்;

(இங்ஙனேயாகில்,)

நாரணன் தம்மன்னை நாகம் புகான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-“நாடு நகருமறிய” என்கிறவிது ஈற்றடியில், ‘நாடுமின்” என்ற வினைமுற்றோடு இயையும். அழுங்கி- ஆத்துமாவுக்கு இயற்கையாயுள்ள ஸ்வரூபப்ரகாசம் மழுங்கி என்றபடி,

English Translation

Letting the town and country know, you give a local man’s name to your child, and fall into the same pit that he is in. Call “O Lord-who-smote-the-cart!”, “O Damodara!” and exult. Narayana’s own mother can never go to Hell.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top