(3509)

(3509)

பீடுடை நான்முக னைப்படைத்தானுக்கு,

மாடுடை வையம் அளந்த மணாளற்கு,

நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்

பாடுடை அல்குல் இழந்தது பண்பே.

பதவுரை

பீடு உடை நான்முகனை

பெருமைபொருந்திய பிரமனை
படைத்தானுக்கு

(தனது திருநாபிக்கமலத்தில்) படைத்தவனும்
மாடு உடை வையம்

வஸுமதியான பூமயை
அளந்த மணாளற்கு

(திரிவிக்கிரமனாகி) அளந்துகொண்ட மணவாளனும்
நாடு உடை மன்னர்க்கு

நாட்டுக்கு கடவரான பாண்டவர்களுக்காக
தூது செல் நம்பிக்கு

தூது சென்றவனுமான பெருமான் விஷயத்தி லீடுபட்டதனால்
என் பாடு உடை அல்குல்

பரந்தநிதம் பத்தையுடையளான என்மகள்
இழந்த்து பண்பு

இழந்த்து தன் இயற்கையை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பீடுடை நான்முகனை) இப்பாட்டில் தன்மகன் பண்பிழந்தாளாகக் கூறுகின்றாள் பண்பாவது இயற்கையான தனமை எம்பெருமானது ஒரோக்குணங்களை நினைத்து விகாரப்படுகின்றாளென்றவாறு.

பீடுடைநான்முகனைப் படைத்தானுக்கு – உலகில் ருத்ரனுக்கு மேற்பட தெய்வமில்லையென்று பலர் மயங்கிக்கிடப்பார்கள், அந்த ருத்ரனையோ நான்முகன் படைத்தவன், அந்த நான்முகனையும் திருநாபிக்கமலத்தில் நின்று படைத்தவன் எங்கள் பெருமான், ஆகவே யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீயென்றால் அஃதுனக்கு வியப்பாமோ? * (திருவரங்கக்கலம்பகம்) என்னும்படியான பரத்வம் பெற்றிருந்து, அந்தப்பரத்வம் காட்டி என்னை யீடுபடுத்திக்கொண்டவன் என்று சொல்லி நைகின்றாளென்க.

மாடுடைவையமளந்த மணாளற்கு – தன் திருவடியின்கீழே ஒதுங்க வேணுமென்னும் நினைவு இல்லாதாரையும் ஹடாத்தாக (உலகளகிற வாஜத்தாலே) தன்னடிக்கீழ் ஆக்கிக்கொண்டவன் அபிநிவேசம்மிக்க என்னை மாத்திரமேயோ திருவடிக்கு அகப்படுத்திக்கொள்வாதொழிவது! என்று சொல்லி கைகின்றாள்.

நாடுடை மன்னர்க்குத் தூதுசெல்நம்பிக்கு – சிலர், கழுத்திலே ஓலைகட்டித் “தூதுபோ” என்றால் அப்படியே செய்து பாண்டவ தூதனென்று பேர்படைத்த மஹாஸௌலப்யகுணத்தை நினைத்து உருகுகின்றாளென்கை. எம்பெருமான் ஸ்ரீராமனாக ஓர் அவதாரமெடுத்தான். அப்போது மாருதி தூதக்ருத்யம் செய்த பெருமையைப் பார்த்து “இங்ஙனே தூதுசெல்லப்பெறும் பாக்கியம் நமக்கும் கிடைக்கவேண்டாவோ?“ என்று சாலவும் குதூகலித்திருந்தான், அப்போது தான் க்ஷத்ரிய ஜாதியிலே அவகரித்திருந்தமையாலே தன்னைத் தூதுபோகவிடுவார் ஒருவருமில்லையாயிற்று, அக்குறைதீர இடைப்பிள்ளையாய்ப்பிறந்து * சென்றாய் குருபாண்டவர்க்காய் * இன்னார் தூதனென நின்றான் * என்கிறபடியே தூதனாகி, அவாப்தஸமஸ்தகாமனாக ஆனானென்று அடியறிந்தவர்கள் ஈடுபடுவர்கள். இங்கு நம்பி என்ற சொல்லால் இவர்த்தம் தெரிவிக்கப்படுகின்றது. நம்பி – குணபூர்ணன் என்கை. “தூதுசெல் நம்பி“ என்கையாலே தூதுசெல்லப்பெறுகையினாலேயே குணபூர்ணனானானென்கிறது. “நாடுடைய ராஜாக்களான பாண்டவர்ளுக்குத் தூதுபோய் அத்தாலு பூர்ணனானவனுக்கு“ என்பது ஈடு.

கண்ணபிரான் துரியோதனாதியரிடம தூதுசெல்கிற காலத்திலே பாண்டவர்கள் நாட்டையிழந்து கிடக்கையாலே அப்போது அவர்களை நாடுடை மன்னராகச் சொல்லலாமோ? என்று சிலர் சங்கிக்கக்கூடும், இதற்கு நம்பிள்ளை அருளிச்செய்கிறார் – “இருக்கைக்கு ஒரு குரிச்சியும் கொடோம என்று ராஜ்யம் பண்ணுகிறவர்கள் துர்யோதனாதிகளாயிருக்க, பாண்டவர்களை நாடுடை மன்னரென்கிறது பகவதவிப்ராத்தாலே“ என்று.

English Translation

My wide-hipped-daughter has lost her manners, -to the Lord who created the powerful Brahma, to the bachelor-groom who measured the wide Earth, to the one who went as a messenger for the ruling kings.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top