(3395)
அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன,
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடிய தன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே.
பதவுரை
|
அறிவு துரிய பிரானை |
– |
ஒருவர்க்குமறிய வொண்ணாக ஸ்வாமியாயும் |
|
ஆழி அம் கை யணையே |
– |
திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனாயுமிருக்கிற எம்பெருமானையே |
|
அலற்றி |
– |
வாய்வெருவி |
|
ஈறிய |
– |
பரிமளம் மிக்க |
|
நல் மலர் நாடி |
– |
நல்ல பூக்களை நாடுபவரான |
|
நன் குருகூர் சடகோபன் சொன்ன-; |
||
|
ஆயிரத்துள் |
– |
ஆயிரம் பாசுரங்களுள் |
|
திருக் குறுங்குடி அதன் மேல் |
– |
திருக்குறுங்குடி விஷயமாகப்பேசினதாய் |
|
குறி கொள் |
– |
எம்பெருமானுடைய திவ்யாவயவ திவ்யாயுத திவ்யாபரணலாஞ்சனம்களை யுடையதான |
|
இவைபத்தும் |
– |
இத்திருவாய்மொழியை |
|
அறிய |
– |
பொருளும் தெரியும்படி |
|
கற்று |
– |
ஓதி |
|
வல்லார் |
– |
தேறினவர்கள் |
|
ஆழ் கடல் |
– |
ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்நிலத்துள் |
|
வைட்டணவர் |
– |
சிறந்த ஸ்ரீஐவஷ்ணவர்களாகக் கொண்டாடப்படுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (அறியவரிய பிரானை) கையுந் திருவாழியுமாயிருக்கிற தன்னுடைய அழகு ஒருவர்க்குமறியவொண்ணாதபடியிருக்கிற எம்பெருமானையே அலற்றித் திருக்குறுங்கடி நம்பி விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த இத்திருவாய்மொழியை அறியக் கற்றுவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவ ஸார்பௌமர்களாய் வீறு பெறுவார்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
நிற நன்மலர்நாடி = ஆசார்யஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் *** மலர்நாடி ஆட்செய்ய உய்யக்கொண்டு ஆரைக் கொண்டு வாளம் வில்லுங் கொண்டென்கிற இழவுகள் தீரப்பெற்றது” என்கிற சூர்ணிகையின் வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள், “* நறிய நன்மலர் நாடி என்கிறபடியே சேஷத்வபரிமளயுக்தமாய் ச்லாக்க்யமான ஆத்மபுஷ்பங்களைத்தேடி” என்று பொருளருளிச்செய்தலும், “ஸர்வவ்யாக்யானங்களிலும் ‘பரிமளத்தையுடைத்தாய் ச்லாக்யமான புஷ்பங்கள்போலே ஆராய்ந்து சொன்னவாயிரம்’ என்று ப்ரபந்த விசேஷமானச் சொல்லியிருக்கையில், இவர்க்கு நினைவு ஆத்மபுஷ்பங்களைத் தேடி யென்கிறவிது என்றுகொள்ளவேணும்” என்றருளிச்செய்ததும் இங்கு அறியத்தக்கன.
நாடி என்பதை வினையெச்சமாகவும் கொள்ளலாம்; இ விருதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம்.
குறிகொள் என்கிற அடைமொழி ஆயிரத்திற்குமாகலாம், இப்பத்துக்குமாகலாம்.
அறியக்கற்று வல்லார் வைட்டணவர் = ஏடு பார்த்துக் கற்கையன்றிக்கே ஆசார்யோச்சாரண அநூச்சாரணமுகோ அப்யஸிக்கையாகிய அத்யயநத்தைப் பண்ணி, உபதேசமுகத்தாலே அர்த்தஜ்ஞானம் பிறந்து அதற்கேற்றவாறு அனுட்டிக்கவும் வல்லாரானால் ஸ்ரீவைஷ்ணவத்வஸித்தி யுண்டாகுமென்றதாயிற்று.
இப்பத்துப் பாசுரங்களைக் கற்றதனாலேயே வைஷ்ணவத்வம் ஸித்தித்து விடமாட்டாதென்றும், திருவாய்மொழியாயிரமும் கற்றதனாலாகும் பலனை இப்பதிகத்திற்குமாத்திரம் கூறினது ஒருவகையான அதிசயோக்தியென்றும் திருவுள்ளம்பற்றிய அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்யஹ்ருதயத்திலே “சங்தங்களாயிரமும் அறியக்ற்று வல்லாரானால் வைஷ்ணவத்த ஸித்தி” என்றருளிச்செய்தார்.
“ஆழ்கடல் ஞாலத்துள்ளே – வைட்டணவர்” என்றவிடத்து நம்பிள்ளையீடு;- “மருபூமியான ஸம்ஸாரத்திலிருக்கச்செய்தே நித்யஸூரிகளோடொக்கச் சொல்லாம்படியாவர்கள் உகந்தருளின நிலங்களில் வாசியறியுமவர்கள்.”
English Translation
This decad of the thousand well-known songs, by fair kurugur’s satakopan on the Lord of Tirukkurungudi, the incompre hensible discus bearer, is sung with flowers. Those who sing it with understanding will unite with Vishnu while on Earth.
