(338)

(338)

அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை

குலம்பாழ் படுத்துக் குலவிளக் காய்நின்ற கோன்மலை

சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்க ளாடும்சீர்

சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.

பதவுரை

தெய்வம் மகளிர்கள்

தேவஸ்திரீகள்

சிலம்பு ஆர்க்க (நமது) பாதச்சிலம்புகள் ஒலிக்கும்படி

வந்து (பூலோகத்தில்) வந்து

ஆடும் சீர்

நீராடும்படியான பெருமையையுடைய
சிலம்பு ஆறு

நூபுரகங்கையானது
பாயும்

(இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென்திருமாலிருஞ் சோலை

அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா

பிராணிகளை அலையச் செய்தும்
வெருட்டா

பயப்படுத்தியும்
கொன்று

உயிர்க்கொலை செய்தும்
திரியும்

திரிந்து கொண்டிருந்த
அரக்கரை

ராக்ஷஸர்களை
குலம்பாழ்படுத்து

ஸகுடும்பமாகப் பாழாக்கி
குலம் விளக்கு ஆய் நின்றகோன்

(இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான)
மலை

திருமலையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அலம்பா, வெருட்டா – ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; அலம்பி, வெருட்டி என்றபடி: அலம்புதல் – ‘இவர்களின் கீழ் நமக்குக் குடியிருக்க முடியாது’ என்று நிலைதளும்பச் செய்தல்; பிறவினையில் வந்த தன்வினை. (சிலம்பு ஆர்க்க இத்யாதி.) தேவஸ்த்ரீகள் முன்பு நூபுரகங்கையில் நீராட வரும்போது ராவணாதி ராக்ஷஸர்களுக்க அஞ்சித் தாங்கள் இருப்பிடத்தைவிட்டு புறப்படுவது அவ்வரக்கர்கட்குத் தெரியாதைக்காகத் தம் காற்சிலம்புகளை கழற்றிவிட்டு வருவார் சிலரும், அவை ஒலிசெய்யாதபடடி பஞ்சையிட்டடைத்துக்கொண்டு வருவார் சிலருமாயிருப்பர்கள்; எம்பெருமான் அவதரித்து, அரக்கரைக் குலம் பாழ்படுத்த பின்புச் சிலம்பு ஒலிக்க வருவர்களென்க.

சிலம்பாறு- நூபுரகங்கையென்று வடமொழிப் பெயர்பெறும். திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அக்காற் சிலம்பினின்று தோன்றியதனாற் சிலம்பாறு என்று பெயராயிற்று. நூபுரகங்கை என்ற வடமொழப் பெயரும் இதுபற்றியதே. நூபுரம்-சிலம்பு, ஒருவகைக்காலணி. இனி இதற்கு வேறுவகையாகவும் பொருள் கூறுவர், ஆழ்வான், ஸுந்தரபாஹுஸ்தவத்தில், “***“ என்றருளிச் செய்தபடி * மரங்களுமிரங்கும் வகை மணிவண்ணவோவென்று கூவின ஆழ்வார் பாசுரங்களைக்கேட்ட குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையால், அதற்குச் சிலம்பாறென்று  பெயராயிற்று, சிலம்பு – குன்றுக்கும் பெயர், “சிலம்பொழி ஞெகிழிகுன்றாம்“ என்பது சூளா மணி நிகண்டு. இப்பொருளை ரஸோக்தியின் பாற் படுத்துக.

திருமாலிருஞ்சோலை- நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பாண்டி நாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும், ‘***** என்ற வடமொழியிற் கூறப்படுவதும்,‘கோயில்  திருமலை பெருமாள் கோயில் அழகர் திருமலை’ என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிற நான்கு திருப்பதிகளுள் ஒன்றும், “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்றும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’ என்றபடி ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மஹிமையையுடையதுமானதொரு திவ்யதேசம். “ஆயிரம் பூம்பொழிகளையுடைய மலையாதலால், ‘மாலிருசோலைமலை’ என்று திருநாமமாயிற்று; மில்- பெருமை; இருமை- பெருமை; இவ்விரண்டும் தொடர்ந்து ஒரு பொருட் பன்மொழியாய் நின்றன. இனி, மால – உயர்ச்சி, இருமை- பாப்பு என்று கொண்டு உயர்ந்த பரந்த சோலையினையுடைய மலையென்றலுமுண்டு. திரு-  மேன்மை குறிக்கும் அடைமொழி. தென் – அழகு; பாரதகண்டத்தில் தென்னாடாகிய பாண்டிய நாட்டிலுள்ள மலையாதல்பற்றித் தென் திருமாலிருஞ் சோலை’ எனப்பட்தாகவும் கொள்ளலாம்.

English Translation

The Rakshasas roamed freely killing all: The world fled in fear. The Lord, who destroyed them by the root, stands as the tutelary deity in Malirumsolai hill, Where the Nupura Ganga flows, and celestial dames with tinkling anklets come to take a bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top