(3379)
பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்,
முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்,
மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே?
பதவுரை
|
பின் நின்ற |
– |
பிடரிபீடித்துள்ளுவதற்காகப் பின் தொடர்ந்து நின்ற |
|
காதல் நோய் |
– |
ப்ரேம விரோதியானது |
|
நெஞ்சம் |
– |
(தன்குப்பிறப்பிடமான நெஞ்சை) |
|
பெரிது |
– |
மிகவும் |
|
அடும் |
– |
அழிக்கின்றது |
|
ஆல் |
– |
அந்தோ |
|
இரா ஊழி |
– |
இரவாகிய கல்பமானது |
|
முன் நின்று |
– |
முன்னேயிருந்து |
|
கண் புதைய |
– |
கண்தெரியாதபடி |
|
முடிந்து |
– |
மறைந்தது |
|
ஆல் |
– |
அந்தோ; |
|
மண் நின்ற சக்கரத்து |
– |
எப்போதும் கை நழுவாது நின்ற திருவாழியாழ்வானையுடைய |
|
எம் மாயவனும் |
– |
எம்பிரானும் |
|
வாரான் |
– |
வருகின்றிலன் |
|
ஆல் |
– |
ஆதலால் |
|
நின்ற நீள் இ ஆவி |
– |
முடியாதே நின்று நீள்கின்ற இவ்வுயிரை |
|
இவ்விடத்து |
– |
இந்த நிலைமையிலே |
|
காப்பார் ஆர் |
– |
ரக்ஷிப்பார்யார்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பின்னின்ற காதல்) முதலடிக்குப் பொருளருளிச் செய்யாநின்ற திருக்குருகைப்பிரான்பிள்ளான் ஆறாயிரப்படியில்- “முடிந்தபின்பும் செல்லுகின் விச்லேஷவ்யஸகம் ஒன்றும் பொறுக்கலராயிருக்கிறதில்லை” என்றருளிச் செய்திருக்கயாலே, பின்னின்ற என்பதற்கு, பின்னேயும் நிற்கின்ற (அதாவது) நான் மரணமடைந்த பின்னையும் நலிவதாக நிற்கின்ற என்று பொருள். திருவுள்ளம் பற்றியதாக விளங்குகின்றது. பிடரி பிடித்துத் தள்ளுவாரைப்போலே பின்னே நின்று குமுக்குகின்ற காதல் நோய் என்பது நம்பிள்ளையருளிச்செய்த பொருள். ‘மரணமடைந்த பின்னையும் நிற்கின்ற காதல்நோய்” என்றால் இது எங்ஙனே பொருந்துமென்று சிலர் சங்கிக்கக்கூடும்; “நான் முடிந்தாலும் என் காதல் முடியாது போலிருக்கிறது’ என்று சொல்வது உலகத்திலுமுண்டே; அதுவாயிற்று இங்கு விவக்ஷிதம். ஆழ்வார் தம்முடைய காதலைப்பற்றிப் பலவிடங்களில் பல வகையாகச் சொல்லுவார்; “ என் காதலுரைக்கில் தோழீ! மண்டிணி ஞாலமும், ஏழ்கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்” என்பர் ஓரிடத்தில்; “அதனில் பெரிய என்னவா” என்பர் மற்றோரிடத்தில். “பின்னின்ற காதல்” என்கிறார் இங்கு. இந்தக் காதலுக்கு இடம் கொடுக்கலாகாதென்று நான் என்குப் போனாலும் புக்கலிடம் புக்குப் பின்னே திரிந்து கலிகின்றது ப்ரேம வியாதி என்கிறார்.
நெஞ்சம் பெரிது அடும் = நெஞ்சை மிகவும் நோவுபடுத்துகின்றது. ‘கட்டமே காதலென்று மூர்ச்சிக்கும்” என்றதும் காண்க.
காதல்நோய் படுத்துகிறபாடு இங்ஙனேயிருக்க, இந்த இராப்பொழுது படுத்துகிறபாடு பின்னையும் சொல்ல முடியாது. காதலும் இரவும் ஒன்றோடொன்று ஸங்கேதம் செய்துகொண்டு வந்தனபோலும். ‘நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமே சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப்போலே வந்தது.
கண்புதைய முடிற்றான் – இங்கே ஈட- “உட் கண்ணைக் காதல் மறையாநின்றது; கட்கண்ணை ராத்ரி மறைத்தது” என்பதாம். எம்பெருமான் காட்சி தருவதாக எதிரே வந்து நின்றாலும் ஸேவிக்கவொண்ணாதபடி இருள்வந்து முடிகலிகின்றதே! என்கிற வருத்தமும் தோன்றும்.
மன்னின்ற சக்கரத்து- ‘மன்னின்ற’ என்றது. நித்யமாக நின்ற என்றபடி, ‘எப்போதும் கைநழுவா கேமியான் நம்மேள்வினை கடிவான்” என்றும் *** பாநு ப்ரஸ தரக்ஷாயாம் விலம்பமஸஹர்நிவ, ஸதா பஞ்சாயுதமே பிப்ரத் ஸ ந ஸ்ரீரங்கநாயகரே என்றும் சொல்லுகிறபடியே எப்போதும் அடியவர் வினைலெடுக்க கையும் திருவாழியுமாகவே ஸேவைஸாதிக்கின்ற பெருமானும் வந்து தோன்றவில்லையே! முடியவேண்டுமளவிலேயும் நூறேபிராயமாயிருக்கிற இவ்வுயிரை முடித்து ரக்ஷிப்பாரார்? என்கிறார்.
இவ்விடத்தே = ஸர்வரக்ஷகனுமுதலாத இந்நிலைமையிலே என்றபடி.
English Translation
An incurable love-sickness torments my soul. An aeon of darkness hangs over my sunken eyes. My discus-Lord-eternal too does not come. Who on Earth can save this soul?
