(3362)
கலியுக மொன்றுமின் றிக்கே தன்னடி யார்க்கருள் செய்யும்,
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பி ரான்கண்ணன் றன்னை,
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமா றன்சட கோபன்,
ஒலிபுக ழாயிரத் திப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.
பதவுரை
|
தன் அடியார்க்கு |
– |
தன் அடியவர்களுக்கு |
|
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே |
– |
கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி |
|
அருள் செய்யும் |
– |
கிருபை பண்ணுகின்ற |
|
மலியும் சுடர் ஒளி மூர்த்தி |
– |
மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும் |
|
மாயம் பிரான். |
– |
வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான |
|
கண்ணன் தன்னை |
– |
எம்பெருமானைக் குறித்து |
|
கலி வயல் |
– |
நிறைந்த வயல்களையுடைய |
|
தென் திசை |
– |
தென் திசையிலுள்ள |
|
குருகூர் |
– |
திருநகரிக்குத்தலைவரான |
|
காரி மாறன் சடகோபன் |
– |
ஆழ்வார் |
|
புகழ் |
– |
கீர்த்திமிக்க |
|
ஆயிரத்து பத்து |
– |
ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி |
|
உள்ளத்தை |
– |
(கற்பாருடைய) நெஞ்சை |
|
மாசு அருக்கும் |
– |
கல்மஷமற்றதாகச் செய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கலியுகமொன்று மின்றிக்கே) இத்திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகலவிதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார். தேவதாந்தரங்களிலுண்டான பரத்வஜ்ஞானமும், எம்பெருமானைப் பணிந்தும் அற்பப்பிரயோஜனங்களில் விருப்புற்றிருக்கையும் முதலியன மனமாக ஆகும்; இத்திருவாய்மொழியை ஓதவே அவை தீருமென்கிறது.
கலியுகமொன்றுமின்றிக்கெ – “***“ * என்கிற பிரமாணம் இங்கு அறியத்தக்கது. எம்பெருமானை இடைவிடாது. நெஞ்சிலே கொண்டிருக்கை க்ருத்யுகம், அப்படிக் கொண்டிருக்கமாட்டாமை கலியுகம் என்றபடி. கலியுகமொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்கையாவது – தன்னை இடைவிடாது சிந்திக்களல்லராம்படி அநுக்ரஹித்தல்.
English Translation
This decad of the famous thousand songs, sung by Karimaran Satakopan of Kurugur surrounded by happy fields, addressed to the wonder-Lord, the radiant Krishna, destroyer of Kali, will cleanse devotees’ hearts.
