(3179)

(3179)

வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன் சீர்மையை

எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாfடொறும்,

வானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும்,

செம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே.

 

பதவுரை

நும் மனத்து

உங்கள் நெஞ்சிலே

வைம்மின் என்று

வையுங்கள் என்று

யான் உரைக்கின்ற

என்னால் சொல்லப்படுகின்ற

மாயவன்

மாயோனுடைய

சீர்மையை

சீல குணத்தை

எம்மனோர்கள்

என்னைப் போன்றவர்கள்

உரைப்பது என்

சொல்லுவது என்னோ?

அது நிற்க

அது கிடக்க:

வானவர் தம்மை ஆளுமவனும்

தேவர்களை ஆள்பவனான இந்திரனும்

நான்முகனும்

பிரமனும்

சடை முடி அண்ணலும்

ஜடாதரக் கடவுளான சிவனும்

செம்மையால்

முறைமை தவறாது

பரதபங்கயம்

திருவடித் தாமரைகளை

நாள்தொறும்

எப்போதும்

சிந்தித்து

சிந்தனை செய்து

ஏத்தி

துதித்து

திரிவர்

இதுவே காரியமாக இருப்பர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார். “சிந்தியுங்கோள்!” என்று அடிக்கடி நான் சொல்லிக்கொண்டு வருகிற எம்பெருமானுடைய சீலத்தை நான் சொல்லுவது ஒருபுறமிருக்கட்டும்; தங்களையே கடவுளராக மதித்திருக்கின்ற இந்திரன் பிரமன் உருத்திரன் முதலானாருங்கூடத் தங்களுடைய செவ்வைக் கேட்டை விட்டு ருஜுப்ரக்ருதியுடனே அப்பெருமானுடைய பாதாரவிந்தங்களைப் பணிகின்றார்கள்; அன்னவர்களும் வந்து பணியலாம்படி அவன் தன்னை அமைத்துக்கொடுக்கின்றானென்றால் இது எப்படிப்பட்ட சீலமென்று பாருங்கள்; நானெடுத்துரைக்க வேண்டுவதோ இரு! என்கிறார்.

என்று+யான் என்றியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விதி. எம்அனோர்கள்-எம்மனையவர்கள்; எம்மைப்போன்றவர்கள் என்றபடி.

 

English Translation

When the great Indra himself, Brahma and Siva too, room about contemplating his radiant lotus feet, what can a person of my nature say about the grace of the Lord?  So let it be.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top