(3153)
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.
பதவுரை
|
தாள் பரப்பி |
– |
திருவடியை விரித்து |
||
|
மண் தாவிய |
– |
பூமியெல்லாம் அளந்து கொண்ட |
||
|
ஈசனை |
– |
எம்பெருமானைக் குறித்து |
||
|
நீள் பொழில் |
– |
உயர்ந்த சோலைகளையுடைய |
||
|
குருகூர் சடகோபன் |
– |
ஆழ்வார் |
||
|
சொல் |
– |
அருளிச்செய்த |
||
|
கேழ் இல் |
– |
ஒப்பற்றதான |
||
|
ஆயிரத்து |
– |
ஆயிரத்தில் |
||
|
இப் பத்தும் |
– |
இத்திருவாய்மொழியை |
||
|
வல்லவர் |
– |
ஓதவல்லவர்கள் |
||
|
ஞாலம் புகழ |
– |
உலகம் யாவும் கொண்டாடும் படி |
||
|
வாழ்வு எய்தி |
– |
வாழ்ச்சிபெற்று |
||
|
(அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) |
||||
|
வாழ்வர் |
– |
விளங்குவர். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத் திருவாய் மொழியை ஓதவல்லவர்கள் உலகமெல்லாங் கொண்டாடும் படியான வாழ்ச்சியைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.
இப்பதிகம் திருவேங்கடமுடையானைக் கவிபாடினதாயிருக்க “தாள்பரப்பி மண்தாவிய வீசனை” என்றது என்னென்னில்; எல்லாரையும் திருவடிகளின் கீழேயிட்டுக்கொள்ளுகைக்காக நிற்கிறநிலையாலும், * கானமும் வானரமுமானவற்றுக்கம் முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறபடியாலும் திருவேங்கடமுடையானை உலகளந்த பெருமானாகச் சொல்லப் பொருத்தமுண்டென்பர் ஆசிரியர்கள்.
(வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.) ‘ஞானம்புகழ் வாழ்வர்’ என்றாவது, ‘ஞாலம்புகழ வாழ்வெய்துவர்’ என்றாவது அருளிச்செய்தால் போதுமே; ‘வாழ்வெய்தி வாழ்வர்’ என்றவிது புநருக்தியாவுள்ளதேயென்று சிலர் சங்கிக்ககூடும்: பெறுகிற வாழ்வு இவ்வாத்மாயுள்ளதனைவுமாகும் என்று காட்டுகிறதாகையாலே புநருக்தியில்லை: கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற வாழ்வைப்பெற்று எந்நாளும் அந்த வாழ்வுடனே யிருக்கப் பெறுவர்கள் என்றவாறு. “ஞாலம் வாழ்வெய்திப் புகழ வாழ்வர்” என்று அந்வயித்துப் பொருள்கொள்வதுமுண்டு; அப்போது சங்கைக்கு உதயமேயில்லை.
English Translation
Singing this decad of the thousand songs by peerless kurugur Satakpan on the Lord who strode the Earth, wins a life of praise from all.
