(3111)

(3111)

சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,

அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,

மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,

பதியதுவேத்தி யெழுவதுபயனே.

 

பதவுரை

சதிர்

அழகு பொருந்திய

இள மடவார்

இளம் பருவத்துப்பெண்களிடத்து

தாழ்ச்சியை

ஆழய்காற்படுவதை

மதியாது

ஒரு பொருளாக நினையாமல்

அதிர்குரல் சங்கத்து

முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற

அழகர் தம் கோயில்

அழகருடைய ஆலயமாய்

மதி தவழ் குடுமி

சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான

மாலிருஞ்சோலை;

(என்கிற)

பதி அது

அந்தத் திருப்பதியை

ஏத்தி

துதித்து

எழுவதே

உய்வதே

பயன்

புருஷார்த்தம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

மதிதவழ்குடுமி என்றதையும் ஆழ்வான் அந்த ச்லோகத்திலேயே “சசதரரிங் கணாட்யசிகம்“ என்று மொழி பெயர்த்திருகின்றமை காண்க.

மாலிருஞ் சோலைப்பதி – மாலிருஞ் சோலையாகிற பதி என்றும், மாலிருஞ் சோலையிலுள்ள பகவந்மத்திரம் என்றும் கொள்ளலாம்.

 

English Translation

Ignoring the sweet calls of young maidens, it is wise to rise and worship the thundering discus-Lord of Malirumsolai, in his temple kissed by the Moon.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top