(2918)

(2918)

ஒடுங்க அவன்கண் ஒடுங்கலு மெல்லாம்

விடும்பின்னு மாக்கை விடும்பொழு தெண்ணே.

 

பதவுரை

அவன் கண்

அந்த எம்பெருமான் பக்கலிலே

ஒடுங்க

அந்வயிக்கவே

எல்லாம்  ஒடுங்கலும்

(ஆத்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவை யெல்லாம்

விடும்

விட்டு நீங்கும்:

பின்னும்

அதற்குப்பிறகு

ஆக்கை விடும் பொழுது

சரீரம் தொலையும் நாளை

எண்

எதிர்பார்த்திருப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானோடு நமக்குள்ள உறவின் உணர்ச்சி யுண்டாகவே கூசாமல் அணுகலாமென்றார் ஏழம்பாட்டில். அவன் தன்விஷயத்தில் உபயோகப் படுத்துவதற்காகவே தந்தருளின உறுப்புகளை அவன் விஷயத்திலேயே உபயோகப்படுத்து மத்தனையே வேண்டுவது என்றார் எட்டாம்பாட்டில்; இவற்றைக்கேட்ட உலகர்கள் ‘ஆழ்வீர்! நாங்கள் ஸ்வாதந்திரியம் பாராட்டி அதனால் பகவத் விஷயத்தில் ஊற்றமற்றிருக்கின்றோமல்லோம்; எம்பெருமானுடைய போக்யதையை அறியாமலிருக்களோமல்லோம்: அப்ராப்தங்களான விஷயாந்தரங்களை விட்டு ப்ராப்தனான அவனையே பஜிக்கவேணுமென்னும் விருப்பம் மிகவுடையோமாயினும் பஜிக்க வொட்டாத பிரோதிகள் கனக்க உண்டாயிரப்பதனாலன்றோ நாங்கள் பஜியாமலிருக்கிறோம்’ என்ன; நீங்கள் அவனைக் கிட்டவே அந்த விரோதிகளெல்லாம் உடனே விட்டு நீங்குமென்கிறாரிப்பாட்டில்.

 

English Translation

When thus directed, all obstacies will vanish, Then wall for the moment of shedding the body.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top