(2917)

(2917)

உள்ள முரைசெயல் உள்ளவிம் மூன்றையும்

உள்ளிக் கெடுத்து இறை யுள்ளிலொ டுங்கே..

 

பதவுரை

உள்ளம்

நெஞ்சு என்றும்

உரை

வாக்கு என்றும்

செயல்

உடல் என்றம்

உள்ள

ஏற்கெனவே யுள்ள

இம்மூன்றையும்

இந்த மூன்று உறுப்புக்களையும்

உள்ளி

ஆராய்ந்துபார்த்து

கெடுத்து

அவற்றிற்குள்ள விஷயாந்தரப்பற்றைத் தவிர்த்து

இறை உள்ளில்

எம்பெருமான்பக்கலிலே

ஒடுங்கு

அந்வயிப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? என்ன. புதிதாக ஸம்பாதிக்கவேண்டாமல் ஏற்கனவே அமைந்திருந்துள்ள மனமொழி மெய்கள் மூன்றையும் ‘இவை எம்பெருமானுக்கு அடிமைசெய்வதற்குறுப்பாகவே கண்டவை’ என்று அனுஸந்தித்து, புறம்பண்டான விஷயங்ளில் நின்றும் மீட்டு எம்பெருமான் பக்கலிலே ஊன்றவைப்பதென்கிறாரிப்பாட்டில்.

ஒடுங்கு என்பதை தன்வினையாகவும் பிறவினையில் வந்த தன்வினையாகவுங் கொள்வர். நீங்கள் ஒடுங்கவேணுமென்றும் உங்கள் உறுப்புக்களை ஒடுங்கச்செய்ய வேணுமென்றும் முறையே பொருள்காண்க. ஒடுங்குதல் அந்வயித்தல்.

 

English Translation

Go to the source of thought, word and deed. Direct them to him, and merge yourself too.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top