(2860)
என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை
தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?
பதவுரை
இராமா நுச |
– |
எம்பெருமானாரே! |
என்னையும் பார்த்து |
– |
(ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி |
என் இயல்வையும் பார்த்து |
– |
(இனிமேலும் எவ்வித ஈன்மையும் ஸம்பாதித்துக்கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி |
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில் |
– |
எண்ணிறந்த பல திருக்குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில் |
அருள் செய்வதே நலம் |
– |
(இப்போது போது எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது; |
அன்றி |
– |
இதுவொழிய மேலும் ஆராயுமளவில் |
என்பால் நலம் உளதே |
– |
என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை) |
(நன்மையொன்று மில்லாவிடில் நாம் அருள் செய்யலாகாதென்று திருவுள்ளம் பற்றினால்) |
||
உன்னை சார்ந்தவர் |
– |
தேவரீரை ஆச்ரயித்தவர்கள் |
உன் பெரு கருணை தன்னை என் பார்ப்பர் |
|
தேவரீருடைய கிருபையைப்பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.) |
English Translation
O Ramanuja! Seeing me and my nature, and seeing your infinite virtues, you grace upon me is the only good. Beyond that, if you still see any merit in me, what will your devotees say of your boundless grace?