(2857)
சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு
அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?
பதவுரை
சரணம் அடைந்த தருமனாக்கு ஆ |
– |
தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக |
பண்டு |
– |
முற்காலத்திலே |
நூற்றுவரை |
– |
துரியோதனன் முதலிய நூறுபேர்களை |
மரணம் அடைவித்த மாயவன் |
– |
சாகும்படி செய்த எம்பெருமான் |
தன்னை வணங்கவைத்த சரணம் இவை |
– |
தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை; |
உமக்கு அன்று |
– |
உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல; |
என்று |
– |
என்று இவ்வாறாக உபதேசித்து |
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
உயிர்கட்கு |
– |
ஆத்மாக்களுக்கு |
அரன் அமைத்திலன் எல் |
– |
ரக்ஷையைக் கற்பித்தில ராகில் |
,ஆர் உயிர்க்கு |
– |
இந்த அருமையான ஆத்மாக்களுக்கு |
மற்று அரண் ஆர் |
– |
வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.) |
English Translation
The wonder-Lord caused victory over the hundred for Dharmaputra who took refuge in him. Ramanuja taught us that these limb are not for personal use but for service to the lord. But for him, who would have provided refuge to these suffering souls?