(2797)
மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.
பதவுரை
|
மொழியை கடக்கும் |
– |
வாய்கொண்டு வருணிக்க முடியாதபடி வாசாம கோசரமான |
|
பெரு புகழான் |
– |
பெரிய புகழையுடையவரும் |
|
முக்குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும் |
– |
கல்விக்செருக்கு, செல்வச்செருக்கு குலச்செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படுகுழியைக் கடந்திருப்பவரும் |
|
நம் |
– |
நமக்கு நாதருமான |
|
கூரத்து ஆழ்வான் |
– |
கூரத்தாழ்வானாடைய |
|
சரண் |
– |
திருவடிகளை |
|
கூடியபின் |
– |
நான் ஆச்ரயித்த பின்பு |
|
பழியை கடத்தும் |
– |
ஸர்வபாப நிவர்த்தகரான |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
|
புகழ் பாடி |
– |
நற்குணங்களைப் பாடி |
|
அல்லா வழியை கடத்தல் |
– |
ஸ்வரூபத்திற்குச்சேராத தீயவழிகளைத்தப்பிப் பிழைக்கையான |
|
எனக்கு |
– |
அடியேனுக்கு |
|
இனி |
– |
இனிமேலுள்ள கால மெல்லாம் |
|
யாதும்வருத்தம் அன்று |
– |
ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானாருடையத் துதிப்பதற்குத் தாம் யோக்யதையற்றவர் என்று பின்வாங்கப்பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான் திருவடி ஸம்பந்தத்தை நினைத்து இஃது வாய்கொண்டு வருணிக்கமுடியாத பெரும் புகழ் படைத்தவரும், கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றுவகை ஸம்பத்தும் புஷ்கலமாயிருந்தும் அவற்றால் இறைவும் அஸங்கார மடையாதவருமான கூரத்தாழ்வானாடைய சரணுரவிந்தங்களை ஆச்ரயித்து க்ருதக்ருத்யனான வெனக்கு எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் பாடுதலும் அதுவே காரணமான அர்ச்சிராதிகதியொழிந்த மற்ற கதிகளிற் போகாதபடி அவ்வழியேபோதலும் மிகவுமெளிதேயாம் என்றாராயிற்று.
நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயினாம் ஆழ்வானாடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரஸித்தமான விஷயம்;. நம் தர்சந்ததுக்கு மஹாத்ரோஹியான நாலூரானாக்குக் கொடிய நரகங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத்ஸந்தியிலே ப்ரார்த்திக்க வேண்டியிருக்க, பேரருயாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம் செய்து கண்தெரியும்படி வரம் வேண்டிக்கொள்ளீர் என்ற வரம் வேண்டிக்கொள்ளும்படி விசாலமான திருவுள்ளம்பெற்ற ஆழ்வானாடைய புகழை நாம் என்சொல்வோம்! “மொழியைக்கடக்கும் பெரும்புகழான்” என்றுசொல்வது தவிர வேறு வாசக மில்லைகாணும்.
(வஞ்சமுக்குறும் பாமித்யாதி) கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு, குலச்செருக்கு என்ற இம்மூன்று அஹங்காரங்கள் மிகக்கொடியவை; இவற்றைக் கடத்தல் ஆர்க்கும் அரிது; இவற்றைக் கடந்தவர் என்னும் எற்றம் ஆழ்வர்னொருவர்க்கே அஸாதாரண மென்பதாக எம்பெருமானார் காலத்திலேயே ப்ரஸித்தமாயிற்று. திருவாய்மொழியில் “பலரடியார்முன்பருளிய பாம்பணையப்பன்” என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரத்தில் ஆழ்வான் விஷயமான அருளிச் செய்யப்பட்ட தொரு ஐதிஹ்யம் குறிக்கொள்ளத்தகும். மற்றும் பல இதிஹாஸங்களும் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
English Translation
After taking refuge in our Kurattalvar, -his glory is beyond our words, -who takes us out of the piffalls of deceptive knowledge, I sing the praise of Ramanuja who lifts me above sin. I have escaped from non-paths, now I have no regrets.
