(2794)

(2794)

என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த

முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே

பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்

சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.

 

பதவுரை

ஊழி முதல்வனையே

காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரணபூதனான எம் பெருமானையே

பன்ன

(எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி

பணித்த

(ஸ்ரீபாஷ்யமுகத்தாலே) அருளிச்செய்த

பரன் இராமாநுசன்

ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்

புவியில்

இந்தப்பூமியிலே

என்னை ஒரு பொருள் ஆக்கி

(அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி

மருள் சுரந்த முன்னை பழைவினை வேர் அறுத்து

அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி

பாதமும்

தமது திருவடிகளையும்

என் சென்னி

எனது தலையிலே

தரிக்க வைத்தான்

நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவுமஹாப்ரஸாதம் பெற்றோனான பின்பு)

எனக்கு

அடியேனுக்கு

எதும் சிதைவு இல்லை

எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒருநாளும் எவ்விதமான ஹாநியையும் அடைமாட்டேன் என்கிறார், பதார்த்தகோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களையெல்லாம் வேரற நீக்கி, தமது பாதாரவிந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறு பெற்ற எனக்கு  இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.

மருள் சுரந்த – அஜ்ஞாந்த்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாறு. (ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த) ஊழிமுதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச்செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத்விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப்படையாகச் சொன்னபடி. ஊழிமுதல்வன் – பிரளயகாலத்தில் முழுமுதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்.

 

English Translation

Our lord Ramanjua, who exhorted all to worship the first-Lord alone, made a person out of me in this world.  He destroyed by the root the darkness my age-old Karmas, and gave me his feet to wear on my head, I have nothing to fear.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top