(272)
வன்பேய் முலையுண் டதோர்வா யுடையன் வன்தூ ணெனநின் றதோர்வன் பரத்தை
தன்பே ரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோ தரன்தாங் குதட வரைதான்
முன்பே வழிகாட் டமுசுக் கணங்கள் முதுகில் பெய்துதம் முடைக்குட் டன்களை
கொம்பேற் றியிருந் துகுதி பயிற்றும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
பதவுரை
| வல் பேய் |
– |
கல் நெஞ்சளான பூதனையினுடைய |
| முலை |
– |
(விஷந்தடவின) முலையை |
| உண்டது ஓர் வாய் உடையன் |
– |
(உறிஞ்சி) உண்ட வாயையுடையனான |
| தாமோதரன் |
– |
கண்ணபிரான் |
| தன் பேர் |
– |
(கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை |
| இட்டுக்கொண்டு |
– |
(மலைக்கு) இட்டு, |
| வல்பரத்தை நின்றது ஓர் வன் தூண் என |
– |
பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டுநின்ற ஒரு வலிய தூணைப்போல நின்று |
| தரணிதன்னில் |
– |
இந்நிலவுலகத்தில் |
|
(உள்ளவர்கள் காணும்படி) |
||
| தான் தாங்கு |
– |
தான் தாங்கிக் கொண்டு நின்ற |
| தடவரை |
– |
பெரிய மலையாவது; |
|
– |
||
| முசு கணங்கள் |
– |
முசு என்ற சாதிக்குரங்குகளின் திரள்கள் |
|
(தம் குட்டிகளுக்கு) |
||
| முன்பே |
– |
ஏற்கனவே |
| வழிகாட்ட |
– |
ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக |
| தம்முடை குட்டன்களை |
– |
தம்தம் குட்டிகளை |
| முதுகில் பெய்து |
– |
(தம்தம்) முதுகிலே கட்டிக்கொண்டுபோய் |
| கொம்பு |
– |
மரக்கொம்பிலே |
| ஏற்றியிருந்து |
– |
ஏற்றிவைத்து |
| குதி பயிற்றும் |
– |
அக்கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற |
|
கோவர் *** குடையே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் பசுக்களுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்து வளர்ப்பதனால் தான்பெற்றுள்ள கோவர்த்தநன் என்னுந்திருநாமத்தை அந்த மலை தனக்கு இட்டு அதனைக் குடையாக எடுத்துத் தாங்கிக்கொண்டு நின்றது – வலியதொரு ஸ்தம்பம் பெருஞ்சுமையைத் தாங்கி நிற்பதை ஒக்குமென்று முன்னடிகளால் உவமித்துக் கூறினரென்க. பரத்தை என்றதன்பின் ‘தாங்கி’ என்றொரு வினையச்சம் வருவித்துக்கொள்ளலாம். கண்ணனைத் தூணாகவும், மலையைத் தூண்தாங்கு சுமையாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க. தூண் -??? பரம் – ??? கண்ணபிரான் இவ்வற்புதச் செய்கையைப் பிரமன் இந்திரன் முதலியோர்க்குக் காட்டாது பரமகிருபையினால் அற்ப மனிதர்க்குக் காட்டியருளினனென்பார் தரணிதன்னில் என்றார். இனி, “நின்றதோர் -தன்மேலுள்ளதொரு, வன்பரத்தை -, வன்தூணென – வலியதூணைப் போலே (தூண்தாங்குவதுபோல என்றபடி), தாமோதரன் தாங்குதடவரைதான்” என் வினையெச்ச வருவித்தலின்றியே இயைத்துரைப்பாருமுளர்; இதனை, ???? என்றாற்போலக் கொள்க.
முசு என்பது குரங்குகளின் ஓர்வகைச்சாதி; சேந்தன் திவாகரத்தில் “காருகம் யூகம் கருங்குரங்காரும்” என்றதற்குப் பின், “ஒரியுங் கலையுங் கடுவனும் முசுவே” எனக் கூறியுள்ளது காண்க. குரங்குகளானவை தம்குட்டிகளுக்குக் கிளைதாவும் வழியைக் காட்டுவதற்காக அவற்றைத் தம் முதுகில் கட்டிக்கொண்டுபோய் ஒரு கொம்பிலிருந்து மற்றொரு கொம்பிலே குதிக்கும் விதத்தைத் தாம் முந்துறக் குதித்துக்காட்டிப் பயிற்றுவியா நிற்குமென்பது – பின்னடிகளின் கருத்து. குதி – குதித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். முன்பே – பருவம் நிரம்புவதற்கு முன்னமே என்றலுமொன்று.
இதற்கு உள்ளுறை பொருள் – ஸதாசார்யர்கள் தாங்கள் பிரமாணித்த சிஷ்யர்களைத் தாங்களன்புடனணைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்வழிகாட்டுகைக்காக வேதசாலைகளை ஓதுவித்து அவற்றிலேயே அவர்கள் புத்திஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருக்கும்படி ஞானோபதேசம் பண்ணும்படியைக் குறிப்பித்தவாறாம்.
English Translation
Like a strong column supporting a heavy load, the Lord Damodara, with lips that sucked the breast of an ogress, stood on Earth holding aloft a mount that bears his name. That mount is Govardhana, where monkeys in hordes jump from branch to branch, with their little ones clinging to their backs, as they teach them the maze through the forest.
