(2597)
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே,
எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்.
பதவுரை
|
வழக்கொடு மாறுகொள் அன்று |
– |
(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று; |
|
(அஃது என்னவெனில்) |
||
|
அடியார் வேண்ட |
– |
(மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில் |
|
இழக்கவும் காண்டும் |
– |
(மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்; |
|
இறைவ |
– |
ஸ்வாமீ! |
|
இழப்பு உண்டே |
– |
(என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை) |
|
யான் வேண்ட |
– |
என்னுடைய வேண்டுகோளுக்காக |
|
எம் ஆள் கொண்டு ஆகிலும் |
– |
என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது |
|
என் கண்கள் தம்மால் |
– |
எனது கண்களுக்கு |
|
உன்மேனி சாய் |
– |
உனது திருமேனியின் ஒளியை |
|
காட்டு |
– |
காட்டியருள வேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (வழக்கொடு மாறுகொளன்று.) கீழ்ப்பாடடி“ல் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்; வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நன்கு கண்டு வாழ்த்த வேணுமே; அப்படிக்கு அவனுடைய திவ்யமங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு; அது கிடைக்காமல் என்னவென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி ‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டியருளவேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.
வழக்கொடுமாறுகொளன்று- அடியேன் பிரார்த்திக்கிற விஷயம் வழக்கோடு மாறுகொண்டதன்று; வழக்காவது நியாயம்; நியாயத்தோடு மாறுபட்டதன்று; நியாத்திற்கு ஒவ்வாததை அடியேன் விண்ணப்பம் செய்கின்றிலேன்; நியாயமானதையே சொல்ல வருகின்றேனென்றபடி.
வார்த்தை சொல்லத் தொடங்கும்போதே இன்ன விஷயமென்று சொல்லாமலே ‘அநியாயமாக நான் ஒன்றும் சொல்லவரவில்லை’ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ஆழ்வீர்! நீர் சொல்வது நியாயமோ அநியாயமோ விஷயத்தைக் கேட்டன்றோ நான் தெரிந்து கொள்ள வேண்டும்; சொல்ல நினைத்த விஷயத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன; அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும் என்கிறார். அதாவது- சேஷபூதராயுள்ளவர்கள் சேஷியைநோக்கி ஏதாவ அபேக்ஷித்தார்களாகில் சேஷியானவன் தான் நஷ்டப்பட்டாகிலும் சேஷபூதர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக் காணாநின்றோம் உலகத்தில்- என்றபடி (அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும்.) ‘நம்முடைய அடியார்களன்றோ நம்மை வேண்டுகிறார்கள்; இவர்களுக்கு நாம் உயிரைவிட்டாகிலும் பரிந்து காரியம் செய்ய வேண்டாவோ’ என்று நெஞ்சுகனிந்து, பொருளையோ உடலையோ உயிரையோ எதையேனும் இழப்பதற்கும் இசைந்து தங்கள் பேறாகக் காரியஞ் செய்யக் காண்கிறோமிறே என்கை.
இப்படி ஆழ்வார் சொன்னதைக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! நன்றாகச் சொன்னீர்; உமக்காக என்னை உயிரிழக்கச் சொல்லுகிறீரோ இப்போது; வார்த்தை அழகாயிருக்கிறது!’ என்றான். எம்பெருமான் இப்படி திருவுள்ளங் கன்றினாற்போல் அருளிச்செய்வதைக் கேட்ட ஆழ்வார் அநுதபித்து இறைவ! இழப்புண்டே? என்கிறார். அதாவது- உலகில் நடக்கிறபடியை ஏதோ நான் எடுத்துக்காட்டினேனேயொழிய, தேவரீருக்கு இழவு உண்டாகவேணுமென்று அடியேன் சொன்னேன்; தேவரீர் எதையும் இழக்க வேண்டா- என்கை.
இதுகேட்ட எம்பெருமான், “ஆழ்வீர்! உலகத்தில் தலைவராயுள்ளவர்கள் அடியார் விஷயத்தில் உயிர் முதலியவற்றை இழந்தாகிலும் காரியம் செய்கிறார்களென்று எடுத்துக்காட்டின் உம்முடைய கருத்து எனக்குத் தெரியாமையில்லை; நீர் மறைப்பதில் என்ன பயன்? உம்முடைய எண்ணப்படி நான் எதைவேணுமானாலும் இழந்து காரியம் செய்யத் தடையில்லை; “அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்” என்று நீர் சொல்லியிருக்கிறீர்; நீர் மெய்யே அடியாராகிலன்றோ நான் காரியம் செய்வேன்; நீர் அடியவர்தானோ?’ என்று கேட்டான்.
அதற்கு ஆழ்வார் எம்ஆட்கொண்டாகிலும் என்கிறார். நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால் நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை. எதைக்கொண்டு உம்மை நான் அடியவராக்கிக் கொள்வதென்று எம்பெருமான் கேட்க; அதற்கு ஆழ்வார் யான் வேண்ட என்கிறார். ***- = ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது; ரக்ஷ்யனுடைய அபேடிக்ஷயை மாத்திரமன்றோ ரக்ஷகனான நீ எதிர்பார்த்திருப்பது; நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையேகொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே; என்னுடைய அடிமைக்கு இசைந்ததுதானே உன்னை இறைவனென்றேன்- என்றார். அது கேட்ட எம்பெருமான் ‘இந்த விபூதியில் இவ்வளவு வார்த்தை சொல்லுவார் ஆர்?’ என்று ஆச்சரியப்பட்டுத் திருவுள்ளமுவந்து ‘ஆழ்வீர்! உமக்கு என்னால் ஆக வேண்டிய காரியம் என்ன? சொல்லும்’ என்ன; என் கண்கள்தம்மால் காட்டு உன்மேனிச்சாய் என்கிறார். உனது திருமேனியின் சாயலை என்கண்களுக்குக் காட்டவேணுமென்னுமிவ்வளவே நான் வேண்டுவது என்றாராயிற்று.
கண்கள்தம்மால்- உருபு மயக்கம்; கண்கள் தமக்கு என்க. அன்றி, மூன்றாம் வேற்றுமைப்பொருளைக் கொண்டு, உன் மேனிச்சாயை என் கண்களால் நான் காணும்படி செய் என்றுரைக்கவுமாம். சாய் = ** (சாயா) என்ற வடசொல் சாயை எனத் திரிந்து சாய் எனச் சிதைந்தது.
இப்பாட்டுக்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிய வியாக்கியானத்தில் சிறிதுவேறுவகையான பொருள் கொள்ளப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. அப்பொருளை வல்லார்வாய்க் கேட்டுணர்க.
English Translation
O Lord! this is no breach of conduct, you could make on exception for your devotees, it is no great loss. I Pray you, at least because we are your devotees, let our eyes see the radiance of your dark frame.
