(2361)

(2361)

நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,

ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய – வென்றிலங்கும்

ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,

நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.

 

பதவுரை

நின்று

(கூசாமல்) முன்னே வந்து நின்று

எதிர் ஆய

எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்

நிரைமணி தேர்

ஒழுங்காக அழுத்தின மணிகளையுடைய தேரின்மேலேறி யுள்ளவனுமான

வாணன்

பாணாஸுரனுடைய

ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்

அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்

உடன் எக்காலத்தில்

துணிய

அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து

வென்று

வெற்றி பெற்று

இலங்கும்

விளங்குகின்ற

ஆர்படு

கூர்மையையுடைய

வான்

திவ்யமான

நேமி

திருவாழியாழ்வானை யுடையவனாய்

அரவு அணையான்

சேஷசாயியான எம்பெருமானுடைய

சே அடிக்கே

திருவடிகளிலே

நெஞ்சு தான்

(எனது) நெஞ்சு தானே

முயலும்

உத்ஸாஹப் படுகின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய நெஞ்சு எம்பெருமான் திருவடிகளிற் சென்று சோ உத்ஸாஹங்கொண்டிபடியே அருளிச்செய்கிறார்.

நின்று எதிராய – தாமஸதெய்வத்தைப் பணிந்தவனாகையாலே ஸர்வேச்வானென்று மதியாதே எதிரிட்டு நின்றானென்ப.

‘ஆர்படு‘ என்பதற்கு ‘கூர்மையை யுடைத்தான்‘ என்றும் அரங்களையுடைத்தான‘ என்றும் பொருள் நின்றானென்ப.

 

English Translation

Our lives will automatically be drawn to the lord who wields a radiant discus.  He sliced the thousand arms of the Asura. Bana, who came to war with him on this jewelled chariot.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top