(232)

(232)

தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம்கொண்டு புக்கு

முத்தார் கொங்கை புணர்ந்துஇரா நாழிகை மூவேழு சென்றபின் வந்தாய்

ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான்ஒன்றும் மாட்டேன்

அத்தா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

தொத்து ஆர்

கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள
பூ

புஷ்பங்கள் அணியப்பெற்ற
குழல்

கூந்தலையுடைய
கன்னி ஒருத்தியை

ஒரு கன்னிகையை
தடஞ்சோலை

விசாலமானதொரு சோலையிலே
இரா

(நேற்று) இரவில்
கொண்டு புக்கு

அழைத்துக்கொண்டுபோய்

(அவளுடைய)

முத்து ஆர்

முத்துவடமணிந்த
கொங்கை

ஸ்தநங்களோடு
புணர்ந்து

ஸம்ச்லேஷித்துவிட்டு
மூ ஏழு நாழிகை சென்ற பின்

மூன்றுயாமங்கள் கடந்த பிறகு
வந்தாய்

(வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்;

(நீ இவ்வாறு தீமை செய்கையாலே)

உன்னை

உன்னைக்குறித்து
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்

வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்;

(இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி)

உரப்ப

(உன்னை) சிக்ஷிக்க
நான்

(அபலையாகிய) நான்
ஒன்றும்

கொஞ்சமும்
மாட்டேன்

சக்தையல்லேன்;
அத்தா

நாயனே!

உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-’ சோலைத்தடம்’ என்றவிடத்து ‘தடம்’ என்ற சொல் தடம் என்ற வடசொல்லின் விகாரமாய் ‘சோலைத்தடம்’ என்பதற்குச் சோலைப் பிராந்தங்களிலே என்று பொருள்கொள்ளவுங் கூடும். [ஒத்தார்க்கு இத்யாதி.] (ஒத்தார்க்கு என்றது ஒத்தார் என்றபடி; ஆறனுருபுக்குப் பொருளில்லை; வழக்கு பற்றி வந்த வழுவமைதி.) உன்மேல் பழிசொல்ல நினைத்தவர்கள் நீ செய்யாதவற்றையுஞ் சில சேர்த்துக்கொண்டு தாங்கள் நினைத்தபடி சொல்லத் தடையில்லை யென்றவாறு. உரப்புதல்-வாயால் அதட்டுதல்; “ஊனமுடையன செய்யப்பெறா யென்றிரப்ப நுரப்பகில்லேன்”” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

English Translation

You took a flower-coiffured maiden into the deep forest, embraced her pearly breasts and came back after the third watch of the night. People speak ill of you. Alas, I am unable to scold you. My Lord, I know you now, I fear to give you suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top