(223)

(223)

தன்னே ராயிரம் பிள்ளை களோடு தளர்நடையிட்டு வருவான்

பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்

மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை துஞ்சவாய் வைத்த பிரானே

அன்னே உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

தன் நேர்

(வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த
ஆயிரம் பிள்ளைகளோடு

ஆயிரம் பிள்ளைகளோடு கூட
தளர்நடை இட்டு

தளர்நடை நடந்து
வருவான் -வருகின்ற கண்ணபிரானே!

பொன் ஏய்

(நிறத்தால்) பொன்னை ஒத்திராநின்ற
நெய்யோடு

நெய்யோடுகூட
பால் அமுது

போக்யமான பாலையும்

(இடைச்சேரியில் களவு கண்டு)

உண்டு

அமுதுசெய்து

(ஒன்றுமறியாத பிள்ளைபோல)

பொய்யே

கபடமாக
தவழும்

தவழ்ந்து வருகின்ற ஒரு புள்ளுவ நொப்பற்ற கள்ளனே!
மின் நேர்

மின்னலைப்போன்று
நுண்

அதிஸூக்ஷ்மமான
இடை

இடையையும்
வஞ்சம்

வஞ்சனையையுமுடையளான
மகள்

பூதனையென்னும் பேய்மகள்
துஞ்ச

மாண்டுபோம்படி
கொங்கை

(அவளுடைய) முலையிலே
வாய் வைத்தை

தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து)
பிரானே

நாயனே
உன்னை

(நம் பிள்ளை என்று இதுவரை என்னால் பாவிக்கப்பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்

(அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்

(ஆதலால் )

உனக்கு

உனக்கு
அம்மம் தர

முலை கொடுக்க
அஞ்சுவன்

பயப்படா நின்றேன்
அன்னே

அஹஹ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணன் திருவாய்ப் பாடியிலே வந்து பிறந்தபோது அவனோடு கூட ஆயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள் ஆகையால், இளமைத் தொடங்கி தன்னை விட்டுப் பிரிய மாட்டாதவர்களாய் தன்னோடு கூடவே விளையாடித் திரிகின்ற அப்பிள்ளைகளோடேயே ஸ்ரீகிருஷ்ணன் திரிதலால் “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்” என்றும் இப்படி தளர்நடை இடுபவன் ஒவ்வொரு வீட்டிலும் புக்கு அங்குள்ள தயிர் நெய் பால் முதலியவற்றை எல்லாம் திருடி வயிறார விழுங்கிவிட்டு ‘இந்தப் பூனை இந்தப் பாலை குடிக்குமா?’ என்னும்படி தவழ்ந்து நடை கற்பனாதலால்

“பொன்னேய் நெய்யோடு பாலமுண்டு பொய்யே தவழும் புள்ளுவன்ன”  என்றும் விளிக்கிறார். இரண்டும் அண்மை விளி; இயல்பு (மின்னோ இத்யாதி) உனக்கு ஒருத்தி முலைக்கொடுக்க வந்து தான் பட்ட பாட்டை நான்றிந்துள்ளேன் ஆதலால்  “நம்மையும் அப்பாடு படுத்துவனோ” என்றஞ்சுகிறேன் என்கிறாள். அன்னே- அச்சக்குறிப்பிடைச் சொல், தூங்க என்னும் பொருளதான துஞ்ச என்ற சொல்லை ‘சாவு’ என்ற பொருளில் பிரயோகிப்பது – மங்கல வழக்காம்; தீர்க்க நித்திரை அடையும்படி என்பது கருத்து; ‘முன்னத்தினுணருங் கிளவியுமுளவே” என்றார் நன்னூலாரும்.

English Translation

With a thousand boys like you around, you come home dragging your feet. Gulping sweet milk and golden Ghee, you pretend to crawl like a child. O Lord, you sucked the life of the slender-waisted deceiver Putana. O My! I know you now, I fear to give you suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top