(222)
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கைநல் லார்கள் தாம்வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைப்கோன் பட்டன்சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே.
பதவுரை
| நல் மங்கைமார்கள் தாம் |
– |
(பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள் |
| அம் கமலம் |
– |
அழகிய செந்தாமரைப் பூப்போன்ற |
| கண்ணன் தன்னை |
– |
கண்களையுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக |
| அங்கு வந்து |
– |
அந்தக் கண்ணபிரானுடைய வீட்டுக்கு வந்து |
| அசோதைக்கு |
– |
(அவன் தாயான) யசோதைப் பிராட்டியிடத்திலே |
| முற்பட்ட |
– |
(தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன |
| அவர் சொல்லை |
– |
அவ்விடைச்சிகளின் சொல்லை, |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு |
| கோன் |
– |
நிர்வாஹகரான |
| பட்டன் |
– |
பெரியாழ்வார் |
| சொல் |
– |
அருளிச்செய்த |
| இவை |
– |
இப்பாசுரங்களை |
| இங்கு |
– |
இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே) |
| வல்லவர்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
| ஒன்று ஏதம் |
– |
ஒருவகைக் குற்றமும் |
| இல்லை |
– |
இல்லையாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
ஹ***-இப்பாட்டால்-இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைகட்டுகிறார். மங்கை நல்லார்கள்-னல்லமங்கைமார்கள் என மாற்றியுரைக்கப்பட்டது.
English Translation
This decad of songs by Puduvai king Pattarbiran recalls the words of beautiful maidens who came to Yasoda complaining about the lotus-eyed Lord. Those who master it will meet no evil.
