(2205)

(2205)

அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்,

அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய்

காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத,

சீற்றத்தீ யாவானும் சென்று.

 

பதவுரை

நல்நெஞ்சே

நல்ல மனமே!

ஆர் அருளும்

பரிபூர்ணக்ருபையாலே உண்டாகக்கூடிய மோக்ஷமும்

கேடும்

நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும்

(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்

அவன் கண்டாய்

அந்த எம்பெருமானே யாவன்;

ஐம்புலன்

பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான

காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் ;

பஞ்சபூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானேயாவன்;

கருவரை

கறுத்த மலைகளும்

(அவன் கண்டாய்)

அவனேயாம்;

சென்று

(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து

கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்

கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நியாகுமவனும்

அவன் கண்டாய்

அந்த எம்பெருமானேயாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் தன்னை வணங்கினவர்களை வாழ்விப்பனென்று கீழ்ப்பாசுரத்திலருளிச் செய்த ஆழ்வார்.  அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு போருகிற எம்பெருமானுக்கு இஃது ஓரேற்றமே வென்கிறார் போலு மிப்பாட்டால்.

ஆரளுங் கேடும் அவன்கண்டாய் இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானேயாதலால் சேதனவர்க்கங்களைக் காக்கவேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று; ஆகவே, கண்ணபிரானே  கரணகளேபரங்களைக் கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த அவதாரிகளைத் தன்னுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச் செய்வானாம் என்றவாறு- மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்று …… சோதி வாய்திறந்து பணித்ததும் உணர்க.

 

English Translation

O Devoted heart! The good and the bad-know that all this is he. The Earth, wind, fire, water and space, -these too are he.  He stands as the five senses also.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top