(218)

(218)

தள்ளித் தளிர்நடை யிட்டுஇளம் பிள்ளையாய்

உள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி

கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர்

துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்.

பதவுரை

(காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே)

தள்ளி தளர்நடை இட்டு

தட்டித்தடுமாறி தளர்நடையிட்டு

(நடக்க வேண்டும்படியான)

இள பிள்ளையாய்

இளங்குழந்தையாய்

(இருக்கச் செய்தே)

கள்ளத்தினால்

(தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த

(தன்னைக் கொல்ல)வந்த
பேய்ச்சி அவளை

பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உறநோக்கி

(’நம்மை நலியவருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே  (எண்ணி) உறைக்கப்பார்த்து

(பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே)

முலை

அம்முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்

(அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ணபிரானால்

இன்று முற்றும்

துவக்கு அற

(அம்முலையில் தடவிக்கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்

(அம்முலையிற் பாலை) உண்ட கண்ணபிரானால்

இன்று முற்றும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் தரையிலே காலூன்றி நடக்க மாட்டாத இளங்குழந்தையாய் இருக்கச்செய்தேயே அநாயாஸமாக விரோதி நிரஸ்நம் பண்ணினவனாயிருந்துவைத்து, பருவம் முற்றமுற்ற ஆச்ரிதைகளான எங்களுக்குத் தீமை செய்ய தலைப்படுவதே என்று வயிறெரிந்து முறைப்படுத்தப்படுகின்றனர். உள்ளத்தின் உள்ளே-இவள் நம்மை நலிய வருகின்றாள் என்று-தான் தெரிந்து கொண்டதை வெளிப்படுத்தினாள், வந்த பூதனை அஞ்சி ஓடிப் போய் விடுவாளென்று உள்ளத்தின் உள்ளே அவளை உறநோக்கினான். ’சுவைத்தான்’ என்ற சொல்நயத்தினால்-விஷந்தடவின அம்முலையைத் தானுண்ணும்போது மாம்பழக்கதுப்பு செப்புமா போலே ரஸ்யமாக உறிஞ்சியுண்டான் என்பது போதரும்; விஷமுண்டால் சிறிது வருத்தமாயினும் உண்டாகக்கூடுமன்றோவென்று சங்கித்து, அக்கண்ணபிரானுக்கு அது லேசமுமில்லை யென்பதைக் காட்டும் “துவக்கறவுண்டானால்“ என்பது.

English Translation

He was a toddler barely able to walk a step. Deep from his heart he took a good look at her. She was an ogress disguised as a midwife. He sucked her breast and drew her life out. Today we are finished,–unharmed by the poison he drank,–O, We are finished.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top