(2172)
ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், – ஏனத்
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
மருவாதார்க் குண்டாமோ வான்.
பதவுரை
| ஊனக் குரம்பையின் |
– |
மரம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே |
| உள் புக்கு |
– |
உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து] |
| இருள் நீக்கி |
– |
(நினைக்கிற அஜ்ஞாநமாகிர) இருட்டைப் போக்கி |
| ஞானம் |
– |
தத்வஜ்ஞாநமாகிற |
| சுdடர் |
– |
விளக்கை |
| கொளீஇ |
– |
ஏற்றி |
| ஏனத்து உரு ஆய் |
– |
வராஹரூபியாகி |
| உலகு இடந்த |
– |
(பிரளயங்கொண்ட) பூமியைக்குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய |
| பாதம் |
– |
திருவடிகளை |
| நாள்தோறும் |
– |
எப்போதும் |
| மருவாதார்க்கு |
– |
ஸேவியாதவர்களுக்கு |
| வான் உண்டாமோ |
– |
பரமபதம் கிடைக்குமோ?[கிடைக்கமாட்டாது.] |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வவதாரத்திற்கு முந்தின வராஹாவதாரம் ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப்பேசி யநுபவிக்கிறார். “ஊனக்குரம்பையினுள்புக்கு” என்றது- “தீண்டா வழும்புஞ் செந்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டு மிறாக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி. இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்; சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்குமென்க. அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சுடர் தன்னடையே கொழுந்துவிட்டோங்குமாதலால் அதனை இரண்டாமடியிலருளிச்செய்தார். ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப்பற்றின ஸத்ஜ்ஞாநம் திகழ்ந்து ஞானப்பிரானது திருவடிகளையடைந்தது வாழுமவர்கட்கே வானுலகம் எய்தலாகும்; மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கொளீ இ-சுடர் கொளுவி; சொல்லிசையளபெடை. உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை ஸத்தையழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன் என்னுங் காரணத்தினால் எம்பெருமானுக்க்கு ஊழியானென்று பெயராயிற்று.
English Translation
The feet of the First Lord who came as a boar and lifted the Earth are like a lamp unto the heart, lit inside the hut of the body flesh, dispelling darkness through knowledge. For those who do not contemplate him everyday, where is liberation?
