(2036)

(2036)

இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்

அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,

வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,

கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.

பதவுரை

இரும்பு

இரும்பானது
அனன்று

பழுக்கக் காய்ந்து
உண்ட நீர் போல்

(அக்காய்ச்சலடங்கும்படி) உட்கொண்ட ஜலம்போலே
எம்பெருமானுக்கு

எம்பெருமான் திறத்திலே
என் தன்

என்னுடைய
அரு பெறல் அரு பெறல் அன்பு புக்கேட்டு

பெறுதற்கரிதான அன்பைச்  செலுத்தி
அடிமை பூண்டு

கைங்காரியம் பண்ணி
உய்ந்து போனேன்

உஜ்ஜீவிக்கப் பெற்றேன்;
(அன்றியும்)
வரும்

(அடியார் இருக்குமி்டந்தேடி) வருகி்ன்ற
புயல் வண்ணனாரை

மேகவண்ணனான அப்பெருமானை
மருவி

கி்ட்டி
என் மனத்து வைத்து

என்னெஞ்சிலே பொருந்த வைத்து
கரும்பின் இன் சாறு போல

கரும்பினுடைய இனிய ரஸம் போலே
பருகினேற்கு

அநுபவிக்கப்பெற்ற எனக்கு
இனிய ஆறே

போக்யமாயிருக்கிறபடி என்னே!.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டிலுள்ள ”கேட்கயானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப்பாட்டிலும் இயைத்துக்கொள்ளலாம். ”தீர இரும்புண்ட நீரதுபோல என்னாருயிரை யாரப்பருக, எனக்காராவமுதானாயே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச்செய்வது இப்பாசுரம் என்க.

இரும்பானது அக்நியாலே மிகவும் காய்ச்சப்பட்டு அக்காய்ச்சலடங்க நீரைப் பருகுமாபோலே நானும் என்னுடைய தாபமடங்க பகவத் விஷயத்தில் அன்பாகிற தண்ணீரைப் பருகி, ப்ராப்தமான அவ்விஷயத்திலே அடிமை செய்யப்பெற்று உஜ்ஜீவித்தேனென்பன முன்னடிகள். தகாத விஷயங்களில் அன்பு உண்டாவதே ஹைஜமாய், பகவத் விஷயத்தில் அன்பு உண்டாவது மேட்டுமடையா யிருத்தல் பற்றி அரும்பெறலன்பு எனப்பட்டது. நெருப்பிலே தாமரை பூத்தாலும் பூக்கும்; அஹய்காரப் பெரு நெருப்பிலே எம்பெருமான் விஷயமான அன்பு விளைவது மிகவுமரிது. ‘அடிமைப்பூண்டு‘ என்றதனால் ஆத்மாவுக்கு அடிமையே ஆபரணமென்பது பெறப்படும்.

(வரும்புயல் வண்ணனாரை இத்யாதி.) இருந்தவிடத்தே யிருந்து வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று ஈரக்கையாலே தடவி விடாய் தீர்க்குமவன் எம்பெருமான். அன்னவனை என்மனத்திலே பொருந்தவைத்துக் கருப்பஞ்சாறு போலே பருகினேன்; பருகின மாத்திரத்திலே வாயாற்சொல்வொண்ணாத இனிமையாயிருக்கின்றதே! ; இதற்கென்ன காரணம்! தெரியவேணுமென்றாராயிற்று.

English Translation

Like a hot iron drinking up water my love swelled.  I directed if to the Lord, made myself his devotee, and found my refuge.  Bearing the cloud-hued Lord in my heart, I drink him like sugarcane juice. Ah, How sweet he is!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top