(193)
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின் றபசு வெல்லாம்
நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய்
மன்றில்நல் லேல்அந்திப் போதுமதிள் திரு வெள்ளறை நின்றாய்
நின்றுகண் டாய்என்தன் சொல்லுநான் உன்னைக் காப்பிட வாராய்.
பதவுரை
| மதிள் |
– |
மதிளரணையுடைய |
| திருவெள்ளறை |
– |
திருவெள்ளறையிலே |
| நின்றாய் |
– |
நின்றருளினவனே! |
| மேல் |
– |
(என்) மேல் |
| ஒன்றும் |
– |
துன்பமும் |
| நேசம் இலாதாய் |
– |
அன்பில்லாதவனே! |
| உன்னை கூவி |
– |
உன்னைக் கூவிக்கொண்டு |
| நின்றொழிந்தேன் |
– |
நின்று விட்டேன்; |
|
(அதனால்) |
||
| பசு எல்லாம் |
– |
பசுக்களெல்லாம் |
| கன்றுகள் இல்லம் புகுந்து |
– |
கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து |
| கதறுகின்ற |
– |
கத்துகின்றன; |
|
(நீ) |
||
| அந்தி போது |
– |
அந்திவேளையில் |
| மன்றில் |
– |
நாற்சந்தியில் |
| நில்வேல் |
– |
நில்லாதே; |
| என தன் சொல்லு |
– |
என்னுடைய வார்த்தை |
| நன்று கண்டாய் |
– |
(உனக்கு) நல்லதாகுங்கிடாய்: |
|
நான் உன்னை காப்பு இட வாராய். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த பசுக்களெல்லாம் கன்றுகளுள்ளவிடத்தில் வந்து சேர்ந்தபின்பும் கறப்பாரில்லாமல் முலைக்கடுப்பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து. ‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலையுண்ணப் பெறாமையால் கத்துகின்றன; பசுக்கள் புறம்பேநின்று கொண்டு கன்றுகள் முலையூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக்கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம். ‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச்சொல்லாகவுங் கொள்வர். நேசம் – ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம்.
English Translation
O Loveless One! I stand here calling you while all the cows have gone to the pen and wait bellowing. Do not stand at the crossroads at dusk. Look, my rods are well-meant. O Lord who stands in the walled city of Vellarai, come, let me ward off the evil eye.
