(180)
தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து
மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற
மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா.
பதவுரை
| தென் இலங்கை |
– |
அழகிய லங்கைக்கு |
| மன்னன் |
– |
அரசனாகிய ராவணனுடைய |
| சிரம் |
– |
தலைகளையும் |
| தோள் |
– |
தோள்களையும் |
| துணிசெய்து |
– |
(அம்பினால்) துணித்துப் போகட்டு |
| மின் இலங்கு |
– |
ஒளிவீசுகின்ற |
| பூண் |
– |
ஆபரணங்களை அணிந்த |
| விபீடணன் நம்பிக்கு |
– |
விபீஷணாழ்வானுக்கு |
| ஏன் இலங்கு நாமத்து அளவும் |
– |
என்பெயர் ப்ரகாசிக்குமளவும் |
| அரசு |
– |
ராஜ்யம் (நடக்கக் கடவது) |
| என்ற |
– |
என்று அருள்செய்து |
| மின் இலங்கு ஆரற்கு |
– |
மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தையுடையவனுக்கு |
|
ஓர் கோல் கொண்டுவா-; |
||
| வேங்கடம் |
– |
திருமலையில் |
| வாணற்கு |
– |
வாழ்ந்தருளுமவனுக்கு |
|
ஓர் கோல் கொண்டுவா-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- துஷ்டர்களைத் தொலைத்தொழித்து சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக்கோல் கொண்டு வா என்பதாம். கொண்டு வாராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப்போவன் என்பது தொனிக்கும். தென் – அழகுக்கும் பேர். துணி – முதனிலைத் தொடர் மின்னலங்காரற்கு என்பதுமொருபாடம்; மின் – விளங்கார் காரத்தை உடையவனுக் கென்று பொருள்: மின்னிலங்காரர்கு என்பது செய்யுளின்பத்திற்குச் சிறக்குமென்க. வாணன் – வாழ்நன்; மரூஉ.
English Translation
The Lord of Venkatam hills, the Lord wearing a radiant garland, felled the heads and arms of the Lanka’s king Ravana and gave the promised kingdom to his younger brother Vibhishana of excellent qualities. O Raven! Go fetch him a grazing staff.
