(180)

(180)

தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து

மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு

என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற

மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா.

பதவுரை

தென் இலங்கை

அழகிய லங்கைக்கு
மன்னன்

அரசனாகிய ராவணனுடைய
சிரம்

தலைகளையும்
தோள்

தோள்களையும்
துணிசெய்து

(அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு

ஒளிவீசுகின்ற
பூண்

ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு

விபீஷணாழ்வானுக்கு
ஏன் இலங்கு நாமத்து அளவும்

என்பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு

ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற

என்று அருள்செய்து
மின் இலங்கு ஆரற்கு

மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தையுடையவனுக்கு

ஓர் கோல் கொண்டுவா-;

வேங்கடம்

திருமலையில்
வாணற்கு

வாழ்ந்தருளுமவனுக்கு

ஓர் கோல் கொண்டுவா-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- துஷ்டர்களைத் தொலைத்தொழித்து சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக்கோல் கொண்டு வா என்பதாம்.  கொண்டு வாராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப்போவன் என்பது தொனிக்கும்.  தென் – அழகுக்கும் பேர். துணி – முதனிலைத் தொடர் மின்னலங்காரற்கு என்பதுமொருபாடம்; மின் – விளங்கார்  காரத்தை உடையவனுக் கென்று பொருள்:  மின்னிலங்காரர்கு என்பது செய்யுளின்பத்திற்குச் சிறக்குமென்க.  வாணன் – வாழ்நன்; மரூஉ.

English Translation

The Lord of Venkatam hills, the Lord wearing a radiant garland, felled the heads and arms of the Lanka’s king Ravana and gave the promised kingdom to his younger brother Vibhishana of excellent qualities. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top